அரசாங்கத்தின்மீது நம்பிக்கை குறைந்து வருகிறது: மெர்டேகா செய்தியில் முகைதின்

messageஅரசாங்கம்  நம்பிக்கைக்குறைவு  என்ற  பிரச்னையை  எதிர்நோக்கி  வருவதாக  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறினார்.

“அரசாங்கத்தின்மீது  மக்களின்  நம்பிக்கை  குறைந்து  விட்டது”, என்றாரவர்.

நேர்மை,  பொறுப்புடைமை  போன்ற  கோட்பாடுகள்  சரிவுகண்டு  வருவதுபோல்  தோன்றுவதைக்  கண்டு  மக்கள்  கவலை  அடைந்திருப்பதாக  முகைதின்   தம்  மெர்டேகா  செய்தியில் கூறினார்.

“அர்ப்பணிப்பு  உணர்வுடன்  பணியாற்றும்  அரசாங்க  அதிகாரிகளின்  சேவை  முடிவுக்குக்  கொண்டு  வரப்படுகிறது.அவர்கள்  பணியிடமாற்றம்  செய்யப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள்.

“அர்ப்பணிப்பு  உணர்வுகொண்ட  அரசாங்க  அதிகாரிகள்,  பொதுச்  சேவை  கோட்பாடுகளை  மீற  முயலும்  மேலதிகாரிகளுக்கு  எதிராகக்  குரல்  எழுப்ப  முன்வருவது  பொதுச்  சேவை  வரலாற்றில்  நினைத்துப்  பார்க்க  முடியாத  ஒன்று”, என்றாரவர்.

கருத்துச்  சொல்லும் மக்களின்  உரிமையை  குறிப்பாக  சமூக  வலைத்தளங்களில்   ஒடுக்கப்போவதாக சில  அரசியல்வாதிகள்   மிரட்டியுள்ளனர்.  ஏனென்றால்,  இத்தலைவர்கள்  நாள்தோறும்  பெருகி  வரும்  மக்களின்  குறைகூறல்களையும்  கண்டன  உரைகளையும்  காது  கொடுத்துக்  கேட்க  ஆயத்தமாக  இல்லை.

“இத்தலைவர்களைக்  கண்டிக்க  முனைவோர்  துரோகிகள்  என்று  அழைக்கப்படுகிறார்கள். அரசாங்கத்தைக்  கவிழ்க்க  முனைவதாகக்  குற்றம்  சாட்டப்படுகிறார்கள்.

“தலைவரை  இடித்துரைப்பதற்கும்  அரசாங்கத்தைக்  கவிழ்ப்பதற்குமிடையே  உள்ள  வேறுபாட்டை  அவர்களால்  புரிந்து  கொள்ள  முடியவில்லை”, என  முகைதின்  கூறினார்.