சிவப்புச் சட்டைகள் செப்டம்பர் 16-இல் நடத்தத் திட்டமிட்டிருக்கும் பேரணிக்கு பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் கூறியதாய் பெர்னாமா அறிவித்துள்ளது.
அப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதே ஆகஸ்ட் 29-30 பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகத்தான் என்றும் கூறப்படுகிறது.
மற்றவற்றோடு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதவி விலகலுக்குக் கோரிக்கை விடுத்த பெர்சே 4 பேரணி சீனர்கள் பெரும்பான்மையாகக் கலந்துகொண்ட ஒரு பேரணி என்றும் அது மலாய்க்கார்களை இழிவுபடுத்தும் பேரணி என்றும் விமர்சகர்கள் குறை கூறியுள்ளனர்.
செப்டம்பர் 16 பேரணி, மலாய் ஒற்றுமையைக் காண்பிக்கவும் மலாய்க்காரர் கெளரவத்தைக் காப்பதற்குமான பேரணி என அதனை ஏற்பாடு செய்துள்ள மலேசிய என்ஜிஓ-கள் கூட்டமைப்பின் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தார். 500 மலாய் என்ஜிஓ-களின் ஆதரவு அதற்கு இருக்கிறதாம்.
அதிகாரிகள் தேசிய நாளுக்கு முந்திய நாள் நடந்த பெர்சே 4 பேரணிமீதே நடவடிக்கை எடுக்காதபோது இப்பேரணியைத் தடுப்பதற்கு எந்தக் காரணமுமில்லை என்றாரவர்.
“இப்பேரணி மழையோ புயலோ நிலநடுக்கமோ எது வரினும் (செப்டம்பர் 16-இல்) நடப்பது உறுதி”, என்றவர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16 பேரணி புக்கிட் பிந்தாங்கிலும் பெட்டாலிங் ஸ்திரிட்டிலும் நடக்கும். அவை சீன வர்த்தகர்களைக் கொண்ட பகுதிகளாகும். பெர்சே 4 மலாய்க்காரர் வணிகர்கள் நிரம்பிய வட்டாரத்தில் நடத்தப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவ்வாறு செய்யப்படுகிறது.
பெர்சே பேரணி நடத்தியவர்கள் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வட்டாரத்தில் பேரணி நடத்தியபோது அங்குள்ள வர்த்தகர்களின் பிழைப்பை எண்ணிப் பார்க்கவில்லையே என்றாரவர்.
“நாங்கள் அமைதியாக இருந்து வந்தோம். அதற்கு நாங்கள் கோபம் கொள்ளவில்லை என்பது பொருளல்ல. அதிகாரிகளுக்கும் சட்டத்துக்கும் அடிபணிந்து தெரு ஆர்ப்பாட்டங்களில் இறங்காதிருந்தோம். ஆனால், இப்போது பணிந்து போக மாட்டோம். ஒன்று கூடப் போகிறோம்”, என்றவர் கூறினார்.
இதனிடையே, ஒரு ஆடவர் சீலாட் போஸ் கொடுத்துக் கொண்டும் ‘tanah tumpah darahku’என்ற வாசகம் எழுதப்பட்டுமுள்ள பேரணி சுவரொட்டிமீது விசாரணை தொடக்கப்பட்டிருப்பதாக போலீஸ் நேற்று அறிவித்தது.
குப்பத்துப் பசங்க….
போட்டின்னா இப்படித்தான் இருக்கணும். அப்பதான் நாடு கெட்டுக் குட்டிச் சுவராகப் போகும். அப்புறம் தங்கத் தட்டிலும், வெள்ளிக் கரண்டியிலும் தின்னுவதற்கு சோறு இல்லாமல் போகும். அப்பதாண்ட உங்களுக்குப் புரியப் போகுது இந்த அரசாங்கத்தின் பொழப்பு. அடுத்து பச்சை சட்டைக் காரர்கள் எப்பொழுது பேரணி நடத்தப் போகின்றார்கள்?. இந்த நாட்டு நடப்பைப் பார்த்தால் சிரிப்போ சிரிப்பு போங்க.
போலிஸ் கூட்டிக் கொடுப்பான். இவனுங்க போட்டுக் கொடுப்பானுங்க. அப்புறம் நாட்டுல நல்ல அமைதி வந்து வாணிபம் கொழித்து சிரிப்பா சிரிக்கப் போகுது நாடு.
அரை வேக்காடுகள். அம்னோவின் பண பலம். இந்த நாதாரிகளுக்கு பகுத்தறிவு இருந்தால் இது போன்ற கீழ்த்தர வேல்களை செய்ய மாட்டான்கள். hadi போன்ற ஈன ஜென்மங்கள் இருக்கும் போது இது ஆச்சரியமில்லையே.
இவர்கள் படுமோசமான தீவிரவாதிகள்.இவர்களின் பேட்டியிலிருந்து சீன வணிக வளாகங்களை. இவர்கள் குறி வைத்திருப்பதாக தெரிகிறது.பெர்சே 4 -ல் எல்லா இனங்களும் கலந்து கொண்டனர்.மலேசியா உட்பட பல உலக நாடுகளில் இது அமைதியாக நடந்து முடிந்தது.ஆனால் சிவப்பு சட்டை தீவிரவாதிகளில் ஒரே இனத்தை சேர்ந்தவர்களே ஆக்கிரமித்து உள்ளனர்.அவர்கள் தேர்ந்தெடுத்த சட்டையும் நிறமும் அவர்கள் எவ்வளவு ஆபாத்தானவர்கள் எனபதைதான் நமக்கு உணர்த்துகிறது.
எல்லாம் நாடக மேடை. எங்கும் நடிகர்கள் கூட்டம். போலிஸ் வேண்டுகோளுக்கேற்ப, சட்டத்துக்கு உட்பட்டு, இந்த பேரணி ரத்து செய்யப்படுகிறது என்ற அறிக்கை கூடிய விரைவில் வெளிவரும்.
BERSIHவின் போரட்டத்தில் ஒரு ஞாயம் இருந்தது… இந்த அரை வேற்க்காடுகள் நடத்தும் போரட்டத்தில் என்ன ஞாயம் இருக்கிறது.
அவனுங்க பேரணி நடத்தட்டும் .உலகம் வேடிக்கை பார்கட்டும். நாணய மதிப்பு படு வீழ்ச்சி. அதை சரி செய்ய வக்கில்லை. இந்த ஆர்ப்பாட்டம் தேவைதான்.