பல இனங்கள் வாழும் மலேசியா போன்ற நாட்டில் இன அடிப்படையில் பேரணி நடத்துவது ஏற்கத்தக்கதல்ல என்கிறார் பாஸ் எம்பி மாபுஸ் ஒமார்.
“அது (பேரணி நடத்துவது) அவர்களின் உரிமை. ஆனால், மலேசியா ஒரு இனத்துக்குத்தான் உரியது என்ற எண்ணம் கூடாது.
“அது முடிவில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்கும்” என்றாரவர்.
மாபுஸ், செப்டம்பர் 16 மலேசிய தினத்தன்று “மலாய்க்காரர் கண்ணியம்” காக்க சிவப்புச் சட்டையினர் நடத்தத் திட்டமிட்டிருக்கும் பேரணி பற்றிக் கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.
பெர்சே 4 பேரணிக்கும் அதற்கு எதிர்ப்பாக நடத்தப்படும் சிவப்புச் சட்டைப் பேரணிக்குமிடையில் நிறைய வேறுபாடு இருப்பதாக மாபுஸ் குறிப்பிட்டார்.
“மஞ்சள் சட்டை பேரணி மக்கள் பேரணி. இந்த (சிவப்புச் சட்டை)ப் பேரணி இன அடிப்படையில் நடத்தப்படுவது”, என்று குறிப்பிட்ட மாபுஸ் இந்த வேறுபாட்டை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்றார்.
“அவர்களின் (ஒன்றுகூடும்) உரிமையை நான் எதிர்க்கவில்லை. அந்த உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், இன அடிப்படையிலான பேரணிகளை ஊக்குவிப்பது ஆபத்தாகும்”, என்றார்.
இப்படிப்பட்ட பேரணிகள் நடப்பதற்குக் காரணமே அரசியல்வாதிகள்தானே. இன பிரிவினையின் அடிபடையில்தானே அரசாங்கமே செயல்படுகிறது.கல்வி,பொருளாதாரம்,வேலை வாய்ப்பு,இன்னும் எத்தனையோ. மேடை அலங்காரத்திற்காக மட்டுமே இன ஒற்றுமைப் பற்றி தொண்டை கிழியப் பேசுவார்கள். இது மக்கள் வழங்கும் சம்பளத்திற்காக பேசப்படும் பேச்சே தவிர ஒற்றுமை உணர்வால் வெளிப்படும் பேச்சல்ல. நாடு சுதந்திரம் அடைந்து 58 ஆண்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் ஒற்றுமை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம்.100வது சுதந்திர நாளின் போது கூட நாம் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்போம்.
அரசியல்வாதிகளின் கபட நாடகம் அம்பலத்துக்கு வந்தாச்சி.மலேசியர்களுக்கு இவர்கள் நடத்தும் அரசியல் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ஆனால் அம்னோ அப்படிச் சொல்லவில்லையே. இன அடிப்படையில் பேசினால் தான் அவர்களுக்கு இலாபம்!
ஏதோ சொல்லி நல்ல பேரை எடுக்கிற நினைப்பில் இருக்கிற மாதரி இருக்கே…?
இனப் அடிப்படையிலான சட்டம் வேண்டும் பேரணி வேண்டாமோ? என்னடா நியாயம் இது?. பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையும் காட்டுற மாதிரி இருக்கு இவர்களின் நடிப்பு. தலை சிறந்த நடிகர்கள் நிலா கட்சித் தலைவர்கள்.