பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்பாக நடத்தப்படும் செப்டம்பர் 16 பேரணியில் 100,000 மேற்பட்ட மலாய்க்காரர்கள் கலந்துகொள்வார்கள் என அம்னோ தலைவர்கள் இருவர் ஆருடம் கூறியுள்ளனர்.
ஆனால், கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் தலைவர் முகம்மட் ரஸ்லான் ராபீ, சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் ஆகிய அவ்விருவராலும் ‘சிவப்புச் சட்டை’ப் பேரணி என்று அழைக்கப்படும் அப்பேரணியின் ஏற்பாட்டாளர் யார் என்பதற்குத் தெளிவான பதிலைக் கொடுக்க முடியவில்லை.
இதன் தொடர்பில் வாட்ஸெப் செய்திகள் நிறைய வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று, முன்னாள் மலாக்கா முதலமைச்சர் தலைமையில் இயங்கும் பெர்சத்துவான் சீலாட் கெபாங்சான் (பெசாகா)தான் அதை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறிற்று.
மலேசியாகினியிடம் பேசிய ஜமால், ஏற்பாட்டாளர் இன்று அல்லது நாளை போலீசாரைச் சந்தித்து பேரணி பற்றி விவாதிப்பார் என்றார்.
“அன்று 100,000-இலிருந்து 300,000 மலாய்க்காரர்கள்வரை கூடுவார்கள் என்று நினைக்கிறேன்.
“அமைதிப் பேரணியான அது மலாய்க்காரர்கள் அவர்கள் அம்னோ, பாஸ் அல்லது வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெர்சேயை எதிர்ப்பதில் ஒன்றுபட்டிருப்பதைக் காண்பிக்கும்.
“அது மலாய்க்காரர்கள் அது(பெர்சே) போன்ற பேரணிகளை ஆதரிக்கவில்லை என்பதைக் குறிப்பாக வெளிக்காட்டும்.
“பெர்சே மக்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்கிறது. ஆனால், அதில் சீனர்களும் டிஏபி கட்சியினருமே நிறைய இருந்ததைக் கண்டோம்”, என்று கூறிய ஜமால், பெர்சே எதிரணியின் கருவியாக செயல்படுவதாகச் சாடினார்.

























பெர்சே அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது…உழல்,தேர்தல் சுத்தம்,அரசு நிர்வாகம் சரியாக நடத்துதல்,விலை வாசி மற்றும் ஜி எஸ் தி அதற்கு மக்கள் தங்களின் சுமையை நினைத்து,வருந்தி,கவலை பட்டு எதிர்காலம் எப்படி இருக்குமோ,பிள்ளைகள் எப்படி கரை சேர்ப்பது,படிப்பு என்று தினமும் கவலை பட்டு பட்டு மக்கள் பேரணிக்கு மலேசிய மண்ணின் மைந்தர்கள் திரண்டார்கள் இதில் 101%அர்த்தம் இருக்குது.சிவப்பு சட்டை கூடுவதர்கு என்ன அர்த்தம் இருக்கிறது எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்…..
உங்களுக்கு ஆயிரம் பேர் சேர்ந்தாலே பெரிய சாதனை!
கூலிக்கு மாரடிக்கும் கூட்டாம் !
பெர்சே 4 இல் கலந்துகொண்டவர்கள் தங்களது சொந்த செலவில் கலந்துகொண்டதோடலாமல் அதற்க்கான செலவுக்கு அதன் ஏற்ப்பாட்டினருக்கு நன்கொடையும் வழங்கயுள்ளனர். ஆனால் சிவப்பு சட்டை பேரணியில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு அந்த சிவப்பு சட்டை முதல் அனைத்து செலவையும் ஏற்ப்பாட்டாலர்களே ஏற்று மேலும் வந்ததற்கு கூலியாக சன்மானமும் வழங்குவர். கூலிக்கு மாரடிக்க தெருசுத்திகள் பல ஆயிரம் பேர் உள்ளனரே. இந்த தெருசுத்திகளுக்கு பணம் கொடுத்தால் காரணம் கேட்காமல் வந்து கூடுவர். கொடுக்கும் கூலிக்கு இடப்படும் கட்டளையை முறையாக செய்து முடிப்பார். சினிமாவில் துணை நடிகர்கள் போல. நடிக்க ஆளிருக்கு, அவர்களுக்கு கொடுக்க பணமும் இருக்கிறது. அப்புறம் என்ன? காலத்தில் இறங்கவேண்டியதுதானே. ஆனாலும் இறைவன் இவர்களையும் ஆசீர்வதித்து அவர்களின் சிந்தனையில் நன்மைதனை விதைத்து நம் எல்லோரையும் வழிநடத்துவாராக.
எல்லாம் பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்வதில் இருந்து தெரிய வேண்டும்.
தோவண்ணா பாவண்ணா சரியாகச் சொன்னார்.
1969 -மே 13 போல் அல்லவா இருக்கிறது இந்த சிவப்பு சட்டை
ஏற்பாடு ! செப்டெம்பர் 16 இல் இந்தியர்கள் வெளியில் வரக்கூடாதாம் .
சீனர்கள் இரத்தம் சிந்துவார்கலாம் . இது என்ன ஆர்ப்பாட்டம்? .என்ன பயமுறுத்தல் ? இதுதான் மலேசிய தினமா? உலகம் பாராட்டும் .
பிரதமர் ஏன் இதற்கு ஒன்றும் பதில் குறைவில்லை.ஏன் இதை தடை செய்யும் மாறு காவல் துறைக்கு கட்டளை இடவில்லை.