செப்டம்பர் 16-இல் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘சிவப்புச் சட்டை’ப் பேரணியில் பாஸ் பங்கேற்காது.
அப்பேரணி மலேசிய தினத்தில் நடத்தப்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.
“மலேசிய தினத்தைச் சமய, இன, பண்பாடு, அரசியல் நிலைப்பாடு போன்ற வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் ஒரு சுதந்திர நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதே பாஸின் எதிர்பார்ப்பாகும்.
“அப்படியிருக்க, செப்டம்பர் 16-இல் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே கலந்துகொள்வதற்காக ஒரு பேரணியை நடத்துவது பொருத்தமற்றது மட்டுமல்ல அது மலேசிய உணர்வுக்கும் எதிரானது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த கூலிப்படைக்கு, பணத்தை அழிக்க அம்னோவில் யார் இப்பொழுது முன்வருவது,மேலே படத்தில் காண்பவர்கள் 15,16 வயதிற்கும்
கீழ் பட்டவர்களாக தெரிகிறது,அதுபோக அம்னோ வளர்க்கும் சாத்தான்களுக்கு(saitan) பெரிய அளவில் தீனி கொட்டவேண்டியிருக்கும்,தலைக்கு 300 வெள்ளி என்றால் x 100,000 = ? தானாக சேர்ந்த மங்களகரமான மபெருகூட்டத்திற்கும்,அம்னோ சேர்த்த சிறுகூளிப்படைக்கும் வேறுபாட்டை காட்டிக்கொள்வதற்கு தயாராக இல்லை அம்னோ.
அம்நோவிடம் இல்லாத பணமா? இன்னும் 30% அளவை எட்டவில்லை எட்டவில்லை என்று அள்ளி விட்டு அம்நோகாரன் கள் வங்கி கணக்கை வான் முட்ட ஏற்றிவிட்டு இன்னும் அள்ளி விட்டுக்கொண்டிருகின்றான்கள்