பாஸ் ‘சிவப்புச் சட்டை’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாது

pasசெப்டம்பர்  16-இல்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும் ‘சிவப்புச்  சட்டை’ப்  பேரணியில்  பாஸ்  பங்கேற்காது.

அப்பேரணி   மலேசிய  தினத்தில்  நடத்தப்படுவது  ஏற்கத்தக்கதல்ல  என்று  அக்கட்சியின்  தலைமைச்  செயலாளர்  தகியுடின் ஹசான்  கூறினார்.

“மலேசிய  தினத்தைச்  சமய, இன,  பண்பாடு, அரசியல்  நிலைப்பாடு போன்ற  வேறுபாடின்றி  அனைத்து  மலேசியர்களும் ஒரு  சுதந்திர  நாளாகக்  கொண்டாட  வேண்டும்  என்பதே  பாஸின்  எதிர்பார்ப்பாகும்.

“அப்படியிருக்க, செப்டம்பர்  16-இல்  ஒரு  குறிப்பிட்ட  தரப்பினர்  மட்டுமே  கலந்துகொள்வதற்காக ஒரு பேரணியை  நடத்துவது  பொருத்தமற்றது  மட்டுமல்ல  அது  மலேசிய  உணர்வுக்கும்  எதிரானது”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.