2016 பட்ஜெட்டில் ஜிஎஸ்டி-யைக் குறைப்பீர்: சிறு வணிகர்கள் வலியுறுத்து

shopஅக்டோபர்  இறுதியில்  தாக்கல்  செய்யப்படும்   2016  பட்ஜெட்டில்  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)யில்  மாற்றம்  செய்யப்பட  வேண்டும். இதுவே  சிறு  வணிகர்களின்  எதிர்பார்ப்பு.

மலேசியாகினி  கிள்ளான்  பள்ளத்தாக்கில் பல  வணிகர்களைத்  தொடர்புகொண்டு  பேசியது. அவர்கள்  அனைவருமே  இவ்வாண்டு  ஏப்ரல்  மாதம்  அமலுக்கு  வந்த  6 விழுகாட்டு வரியை  எண்ணிக்  கவலைப்படுவது  தெளிவாக  தெரிந்தது.

பிரிக்பீல்ட்சில்  பலசரக்குக்  கடை வைத்துள்ள  மல்லிகா  வி.அரசு,  6% வரி  வந்த  பின்னர்  வியாபாரம்  சரிந்து  விட்டதாகக்  கூறினார்.

“ரிம5.90ஆக இருந்த  ஒரு  கிலோ  பருப்பு  இப்போது ரிம10.90  ஆக  விற்கிறது.

“மக்கள்  ஆச்சரியப்படுகிறார்கள். ஜிஎஸ்டி 0%  இருந்தால்  நன்றாக  இருக்கும்”.

தம்  கடை  மட்டுமல்ல  அவ்வட்டாரத்தில்  உள்ள  எல்லாக்  க்டைகளுமே பாதிக்கப்பட்டிருப்பதாக  மல்லிகா  தெஇவித்தார்.

செண்டோல்,  ஐஸ்  கச்சாங்  விற்கும்  சான்  வெய்  கியோங்-  இவரும்  பிரிக்பீல்ட்சைச்  சேர்ந்தவரே-  ஜிஎஸ்டி-யால் சேர்மானப்  பொருள்களின்  விலை  உயர்ந்து  விட்டதால்  செண்டோல், ஐஸ்  கச்சாங்  விலையை  உயர்ந்த  வேண்டியதாகி  விட்டது  என்றார்.

“ஜிஎஸ்டியால்  அவற்றை  வாங்குவதற்கு  ரிம300  செலவிட  வேண்டியுள்ளது.

“ஜிஎஸ்டி  1%, 2% ஆக  இருந்தால் பரவாயில்லை. 6%  அதிகம்”, என்றார்.

பெட்டாலிங்  ஜெயாவில்  பானங்களை  விற்பனை  செய்துவரும்  அஹ்மட்  அஸாமி  ரசாலி,53, ஜிஎஸ்டி-யால்  அரசாங்கத்துக்கு  நன்மை, மக்களுக்கு  நன்மை  இல்லை  என்று  கூறினார்.

“மக்களுக்குத்தான்  சுமை.  அதனால்  நமக்கு  நன்மை  இல்லை.

“எனக்கு  அது  சுமையாக  இருக்கிறது.  ஜிஎஸ்டி  அமலுக்கு  வந்து  நான்கு  மாதங்கள்  ஆன  பின்னரும்   நான்  இன்னும்  விலையை  உயர்த்தவில்லை”, என்றார்.

வியாபாரிகளுக்கு  அரசாங்கம்   நிதி உதவி  அல்லது அலவன்ஸ்  வழங்க  வேண்டும்  என்று  நினைக்கிறாரா  என்று  அவரிடம்  வினவியதற்கு  அவர்  நியாயம்  பற்றிப்  பேசினார்.

“வியாபாரி என்பதால்  நிதி  உதவி  அல்லது  அலவன்ஸ்  கொடுக்கப்படுவதை  நிச்சயமாக  விரும்புவேன்.  ஆனால்,  மற்றவர்களின்  நிலை?

“ஒரு  சிலருக்கு  மட்டுமே உதவி  கிடைப்பது  நியாயமல்ல. அரசாங்கம்  ஜிஎஸ்டி  விகிதத்தைக்  குறைத்தால்  எல்லோருமே  பயனடைவாரக்ள்”, என்றாரவர்.