அல் ஜசீரா செய்தியாளரை நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு

journaஅவசியம்  நேரும்போது  யாரையும்  நாடு  கடத்தும்  சிறப்புரிமை  அரசாங்கத்துக்கு  உண்டு என  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  கூறினார்.

மங்கோலிய  நாட்டவரான அல்டான்துன்யா  கொலை  பற்றி  ஆவணப்படம்  தயாரிப்பதில்  ஈடுபட்டிருந்த  அல்  ஜசீரா  செய்தியாளர்  நாடு  கடத்தப்பட்டது  பற்றிக்  கருத்துரைத்தபோது  நூர்  ஜஸ்லான்  அவ்வாறு  குறிப்பிட்டார்.

“யாரையும்  நாட்டை  விட்டு  வெளியேறச்  சொல்லும்  உரிமை  அரசாங்கத்துக்கு  உண்டு”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அத்துடன்  அது ஒரு  பழைய  செய்தி.  நடந்து மூன்று  மாதங்களாகி  விட்டன  என்றும்  அவர்  சொன்னார்.