ஜோகூரில் இனவாதத்துக்கு இடமில்லை: சுல்தான் அறிவிப்பு

sultanஜோகூர்  சுல்தான்  சுல்தான்  இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டர் அம்மாநிலத்தில்  இனவாதமோ  வெறுப்போ  வளர்வதற்கு  இடமளிக்க  மாட்டார்.

“மலாய்க்காரர்களுக்குச்  சிறப்புச்  சலுகைகள்  உண்டு. அதேபோல்  இந்தியர்களுக்கும்  சீனர்களுக்கும்  ஜோகூரைத்  தங்களின்  தாயகம்  என்று  கூறிக்கொள்ளும்  உரிமை  உண்டு.

“அவர்களின்  முன்னோர்கள்  சீனாவிலிருந்து  அல்லது  இந்தியாவிலிருந்து  வந்திருக்கலாம். ஆனால் அவர்கள்  ஜோகூர்  டாருல்  தா’ஸிமைத்தான்  தாயகம்  என்கிறார்கள்.

“நம்  அன்புக்குரிய  தாயகமான  ஜோகூர்  டாருல்  தா’ஸிமில்  வெறுப்பும்  இனவாதமும்  நிலவுவதை  அனுமதியேன்”, என  நேற்று  முக  நூலில்  சுல்தான்  பதிவிட்டிருந்தார்.