மெர்டேகா மையம்: இன உறவுகள் மோசமடைந்துள்ளன

merdeka cenநாடு  மலேசிய  தினத்தைக்  கொண்டாடும்  வேளையில்  இன  உறவுகள்  மோசமடைந்திருப்பது  கவலை  அளிப்பதாக  மெர்டேகா  மையத்தின்  திட்ட  இயக்குனர்  இப்ராகிம்  சுபியான்  கூறினார்.

அம்மையம்  பிப்ரவரி 14  தொடங்கி  ஜூன்  8வரை  நடத்திய  ஆய்வு  ஒன்றைத்  தாக்கல்  செய்து  பேசிய   இப்ராகிம்,  நாட்டில்  அவநம்பிக்கை  பெருகியிருக்கிறது  என்றார்.

அது  மோசமடைந்து  தேசிய  ஒற்றுமையைப்  பாதிக்கும்  அளவுக்குச்  சென்றிருப்பதுதான்  வருத்தமளிக்கிறது.

“2006-இலிருந்து  நம்பிக்கை  படிப்படியாகக்  குறைந்துகொண்டே  வந்து  2015-இல்  மோசமடைந்துள்ளது”, என்றாரவர்.