கான்கிரிட் நிரப்பப்பட்ட எண்ணெய் பீப்பாயில் இருந்தது மொராய்ஸின் சடலம்தான்: போலீஸ் உறுதிப்படுத்தியது

mohdசுபாங்  ஜெயா  அருகே  காங்கிரிட்டால்  நிரப்பப்பட்ட  ஒரு  எண்ணெய்  பீப்பாயில்  இருந்தது  காணாமல்போன  அரசாங்க  வழக்குரைஞர். அந்தோனி  கெவின்  மொராய்ஸின்  சடலம்தான்  என்பதை  போலீஸ்  உறுதிப்படுத்தியது.

புக்கிட்  அமான்  குற்றவியல்  புலனாய்வு  இயக்குனர்  முகம்மட்  சாலே அதை  உறுதிப்படுத்தினார்.

“அந்த  எண்ணெய்ப்  பீப்பாய்  ஆற்றில்  கிடந்தது.

“உடலை  எடுப்பதற்காக  அந்தப்  பீப்பாய்  அங்கிருந்து  வெளியில்  கொண்டுவரப்பட்டது”, என்றவர்  கூறினார்.

சுங்கை  கிளாங்-கை  ஒட்டியுள்ள யுஎஸ்ஜே  வீடமைப்புப்  பகுதியான  பெர்சியாரான்  சுபாங்  மேவா-வில்  காலை  6 மணிக்கு  மொராய்ஸின்   சடலம்  கண்டுபிடிக்கப்பட்டது.