1எம்டிபி மீது புகார் செய்த இருவர் நாட்டை விட்டு வெளியேறத் தடை

khairuபத்து கவான்  அம்னோ  தொகுதி  முன்னாள்  துணைத்  தலைவர்  கைருடின்  அபு  ஹசானும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  முன்னாள்  உதவியாளர்  மத்தியாஸ்  சாங்கும்  நாட்டை விட்டு  வெளியேறத்  தடை  விதிக்கப்பட்டுள்ளது.

அவ்விருவரும்  1எம்டிபிமீது  பல  நாடுகளில்  புகார்  செய்தவர்களாவர்.

இன்று காலை  நியூ  யோர்குக்கும்  லண்டனுக்கும்  செல்லவிருந்ததாக  கைருடின்  முக  நூலில்  பதிவிட்டிருந்தார்.

போலீஸ்  உத்தரவின்பேரில்  குடிநுழைவுத்  துறை  தம்  பெயரைக்  கருப்புப்  பட்டியலில்  சேர்த்திருப்பதாக  கைருடின்  கூறினார்.

“குடிநுழைவுத்  துறையோ  போலீஸோ  எவ்வித  முன்னறிவிப்பும்  கொடுக்கவில்லை.

“விமானப்  பயணச்  சீட்டு  வாங்கியாயிற்று. லண்டனிலும்  நியூ  யோர்கிலும்  தங்கும் வசதிக்கும்  முன்பதிவு  செய்தாயிற்று. சரியான  காரணமின்றித்  தடுத்து  நிறுத்தப்பட்டதால் எனக்கு  நிறைய  இழப்பு  ஏற்பட்டுள்ளது”, என்றார்.

கைருடின்  சாங்குடன்  விமான  நிலையம்  சென்றபோதுதான்  அவருக்கு  வெளிநாடு  செல்லத்  தடை  விதிக்கப்பட்டுள்ளது  தெரிவிக்கப்பட்டது.