கெராக்கான்: பிஎன் ஒன்றுபடவில்லை என்றால் பெரிய ‘சுனாமி’ ஏற்படலாம்

gerakபினாங்கு  கெரான்  பேராளர்களிடையே  உரையாற்றிய  கட்சித்  தலைவர்  மா  சியு  கியோங்,  எதிர்வரும்  பொதுத்  தேர்தலில்  “மிகப்  பெரிய  சுனாமி”  ஏற்பட்டு  அதில்  பிஎன்  மொத்தமாக  அடித்துச்  செல்லப்படலாம்  என்று  எச்சரித்தார்.

மக்களின்  ஆதரவு  எதிரணி  பக்கம்  திரும்பலாம்  என்பதைத்தான்  சுனாமி  என்று  அவர்  குறிப்பிட்டார்.

பிஎன்  தலைவர்கள்  அக்கூட்டணியில்  பலவீனங்கள்  உள்ளதை  ஒப்புக்கொள்வது  முக்கியம்  என்று  மா  கூறினார்.

பிஎன்  உறுப்புக்  கட்சிகள்  ஒன்று  மற்றொன்றுக்கு  மரியாதை  கொடுக்க  வேண்டும்.

நாடு  முழுக்கப்  பயணம்  செய்ததில்  பலரைச்  சந்தித்தாக  அவர்  சொன்னார். மக்கள்  தனித்தனித்  துருவங்கள்போல்  பிரிந்து  கிடப்பதும்  இன்றைய அரசியல்  போக்கும்  அவர்களுக்குப்  பிடிக்கவில்லை.

“தவறுகள்  செய்ததை  நாம்  ஒப்புக்கொள்ளத்தான்  வேண்டும்.  நானும்  பிஎன்னின்  ஒரு  பகுதிதான்”, என்று  சுமார்  200  பேராளர்களிடம்  பேசியபோது  மா  கூறினார்.