கடந்த புதன்கிழமை சிவப்புச் சட்டையினர் எழுப்பிய இனவாத கூச்சல்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்று மலேசியர்களை மலாயா பல்கலைக்கழக சட்ட விரியுரையாளர் அஸ்மி ஷரோம் கேட்டுக் கொண்டார்.
சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் சீன மக்களை “சீனப் பன்றிகள்” என்று கூப்பிடுவதை நியாயப்படுத்தியை தாம் கேட்ட போது தமது சிந்தனையில் தோன்றியது அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் – மலாய் மாடுகள் (Melayu lembu) என்றாரவர்.
இருப்பினும், அவ்வாறு இருக்கக்கூடாது. ஏன்னெறால் நமது சிவில் சமுதாயம் அதற்கும் அப்பால் செல்ல வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
“சிவில் சமுதாயம் முன்னேறுவதற்கான வழி எது சரியானதோ அதற்காக நாம் கண்டிப்பாக போராட வேண்டும். இனவாத அட்டையை உதறி விடுவோம்.
“எது சரியானதோ நியாயமானதோ அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்போம். இறுதியில், மக்கள் நாம் எதற்காக போராடுகிறோமோ அது சரியானது என்று ஏற்றுக்கொள்வார்கள்.
“நமக்கு என்ன நேர்ந்தாலும் சரி, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்போம்”, என்று அஸ்மி ஷரோம் இன்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கருத்தரங்கில் கூறினார்.


























இது அறிவாளியின் பேச்சு. அவர்கள் திட்டமிட்டு இன துவேசத்தை தூண்டி விட்டு அவசரகாலத்தைப் பிரகடனப் படுத்தி அவர்களின் பிரச்னையை சமாளிக்க காய் நகர்த்துகின்றார்கள். அவர்களின் வழியில் நாம் சென்றோமானால் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகி விடும். அப்புறம் என்ன, அவர்கள் சதிராட நாம் அதிர்ந்து விடுவோம். அவர்கள் பாட்டுக்கு எதிர் பாட்டு பாட வேண்டுமானால் அவர்கள் விரித்த வலையில் சிக்காமல் விலகிச் செல்வதே சாமார்த்தியம். அரசியலில் யார் சாணக்கியன் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நான் சந்தித்த மலாய் மக்கள் பெரும்பாலோர் இந்த சிகப்பு சட்டை பேரணியை ஆதரிப்பதாக தெரியவில்லை.
தேனீ கூறுவது முற்றிலும் உண்மை. இனத்துவேசத்தை தூண்டிவிட்டு, இனங்களிடையே ஒரு கலவரத்தை உண்டுபண்ணி, அதன் வாயிலாக அவசரகாலத்தை பிரகடனப்படுத்தி,அதன் மூலமாக நஜிப் புரிந்த இமாலய ஊழல்களை ஒன்றுமில்லாமல் செய்வதே அவர்களது திட்டம். அந்த சிவப்பு சட்டை பேரணியை ஆதரித்து பேசியுள்ளார், அல்தாந்துயா நஜிப். புரிந்ததா நஜிப்பின் உள்நோக்கம்?
விரிவுரையாளரே! சரியாகச் சொன்னீர்! அவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பாராட்டுக்கொள்ள வேண்டியது தான்! யார் அவர்களை சட்டை செய்தார்கள்? ஆனாலும் உங்களின் பதவி உயர்வு பறிக்கப் படுமே!