மலேசிய சீன சமூகம் மிக அதிர்ஷ்டசாலியானது ஏனென்றால் அச்சமூகம் வேற்றுமை காணல் மற்றும் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் ஆகியவற்றை அது தாங்கிக்கொள்ள வேண்டியதில்லை.
ஆகவே, பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு கடந்த வாரம் வருகையளித்த சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய் காங் கூறிய கருத்துகள் தேவையற்றவை என்று பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர் ஹசான் பாஸ்ரி முகம்மட் கூறினார்.
சீன சமூகத்திற்கு எதிரான எந்த விதமான வன்முறை மற்றும் வேற்றுமை காணல் ஆகியவற்றை சீனா நிராகரிக்கிறது. ஏனென்றால், அது மலேசியா மலேசிய சீனர்களை கொடுமைப்படுத்துகிறது அல்லது அவர்களுக்கு அநீதி இழைக்கிறது என்பதாகும் என்று அந்த தூதர் கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்று ஹசான் மேலும் கூறினார்.
உண்மை என்னவென்றால், மலேசிய சீனர்கள்தான் மிகப் பெரிய அதிர்ஷடசாலிகள் ஏனென்றால் அவர்களுக்கு எதிராக வேற்றுமைக் காட்டப்படுவதில்லை என்பதோடு பல்லின சமுதாயத்தின் உரிமைகளை, கல்வி, அரசியல், சமூக, பொருளாதார, சுகாதாரம் மற்றும் இதர நன்மைகள் உட்பட, அவர்கள் அனுபவிக்கின்றனர் என்றார் ஹசான்.
“எடுத்துக்காட்டாக, மலேசியாவின் பெரும்பாலான கோடீஸ்வரர்கள் சீன சமூகத்தினராவர்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆகவே, பெட்டாலிங் ஸ்டிரீட் பிரச்சனையில் அவரது மூக்கை நுழைப்பதை விட மலேசியாவில் சீன குடிமக்கள் விபச்சாரம் மற்றும் சூதாட்டம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருப்பதை அந்தத் தூதர் கவனிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
முதலில் உன் சமுகத்தை சார்ந்தவர்கள் சூதாட்டம் , வேசித்தனம் , தீவிரவாதம் , போதைப் பொருள் போன்ற நாச வேளைகளில் ஈடுபடுவதில்லை என நிருப்பிக்க முடியுமா…?
தொடக்க பிரச்சனை என்ன என்பதனை சீர்தூக்கி பார்க்காமல் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட
முனைகிறார்
பெர்காச தலைவர்.
உண்மை தான்! அதனால் தான் உங்களால் அரண்மனைப் போன்ற மாளிகைகளில் வசிக்க முடிகிறது! ஆண்டுக்கொருமுறை வெளிநாடுகளுக்குச் சென்று “ஷோப்பிங்” செய்ய முடிகிறது!
சீனா அதன் நாணய மதிப்பை இன்னும் 2% குறைத்தால், இந்த “பெகா” எருமைகள் குட்டையை தேடி ஓடிவிடும்.
சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய் காங் அருமைய சொன்னார் . ஆனால் நமக்கு பிரச்சனை வந்தா இந்திய என்ன சொல்லும் ? ஏற்கனவே இண்ட்ரப் பிரச்சனையில் அது உள் நாட்டு (மலேசியா) பிரச்சனையில் தலை இட மாட்டோம்னு கை கழுவி விட்டாங்க .. இதுதான் நமக்கும் சீனர்களுக்கும் உள்ள வித்தியாசம் …
இந்த கம்மன்னாட்டிகள் என்ன பேசுகின்றனர்? கேட்க நாதி இல்லையா இந்த நாட்டில்? இவ்வளவு கீழ்த்தர புத்தி உள்ள கட்சி உறப்பினர்கள் எப்படி இவ்வளவு திமிராக பேசமுடியும்? இதிலிருந்து தெரிய வேண்டும் யாருடை ஆதரவுடனும் அனுசரணையுடனும் இப்படி பேர்சுகின்றனர் என்று — இதை ஆரம்பித்து வைத்தவன் இன்று நல்ல பிள்ளை வேஷம் போடுகிறான்– MIC – MCA சப்பிகளுக்கு காத்து கேட்கவில்லை இன்றும்.
இந்த சூழ்நிலைக்கு நாடு தள்ளபட்டுள்ளது வருத்தப்பட வேண்டிய ஒன்று .உண்மையான சுதந்திரம் இன்னும் அடையவில்லை என்பதே தற்பொழுதைய நாட்டின் நிலவரம்.இதற்கு பொறுப்பானவர்கள் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர செயல்படுவது நல்லது.சம்பந்தபட்டவர்கள் சிந்ந்திப்பார்கள் என அணைத்து மலேசியர்களும் எதிர்பார்க்கிறோம்.