ஜமால்: அடுத்த பேரணி காஜாங்கில்

kajaலாக்- அப்பிலிருந்து  இப்போதுதான்  வெளிவந்திருக்கும்  மலாய்  என்ஜிஓ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்,  அடுத்த  “பிரம்மாண்டமான”  பேரணியை  காஜாங்கில்  நடத்தத்  திட்டமிட்டுள்ளார்.

பிகேஆர்  தலைவரும்  காஜாங்  சட்டமன்ற  உறுப்பினருமான   டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில் தேர்தெடுக்கப்பட்டு  ஈராண்டுகள்  ஆகியும்  தேர்தல்  வாக்குறுதிகளை  இன்னும்  நிறைவேற்றவில்லையாம்.  அதுதான்  அங்கு  பேரணி  நடத்தப்போவதற்கான  காரணம்  எனறு  ஜமால்  தெரிவித்ததாக  நியூ  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  அறிவித்தது.

“மூன்று  தடவை  காஜாங்கில்  மலாய்க்காரர்களையும்  சீனர்களையும்  இந்தியர்களையும்  சந்தித்துப்  பேசினேன்.  முன்பு  வான்  அசிசாவை  ஆதரித்த  அவர்கள்  இப்போது  ஏமாந்து  போனதாகக்  கருதுகிறார்கள்.  அவர்மீது  ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்”, என்றாரவர்.

வெள்ளப்  பெருக்கு, போக்குவரத்து  நெரிசல்,  குப்பைகள்  முறையாக  அகற்றப்படாத  நிலை  போன்ற  பிரச்னைகளை  அவர்கள்  எதிர்நோக்குவதாக  அவர்  சொன்னார்.

பேரணி  பற்றிய  விவரங்கள்  அக்டோபர்  11-இல் வெளியிடப்படும்  என்றாரவர்.