மகாதிர்: நஜிப் அயல்நாடுகளில் பத்திரமாக இருப்பார்; அனைத்துலகச் சட்டங்கள் அவரைத் தொட மாட்டா

overseasபிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  வெளிநாடுகளில்  பயணம்  செய்யும்போது  அந்நாடுகள் அவர்மீது  நடவடிக்கை  எடுப்பதற்கு  வாய்ப்பில்லை  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார்.

பணச் சலவைக்கு  எதிரான  நடவடிக்கை  என்பது  “சாமானிய  மக்கள்” மீதுதான்  எடுக்கப்படும்  என்றாரவர்.

“நான்  பணச் சலவையில்  ஈடுபட்டால்  கைது  செய்யப்படலாம். ஆனால்,  நீங்கள்  உயர் பதவியில்  இருப்பவர்  என்றால்  உங்களை  ஒன்றும்  செய்ய  மாட்டார்கள்.

“உலக நாடுகள்  எதுவும்  செய்யும்  என்று  நான்  நினைக்கவில்லை…….பிரச்னைக்குரிய  பணம்  இருப்பது   தெரிந்தால்  நாம் வங்கிக்  கணக்கை  முடக்கி  வைப்போம். ஆனால், அவர்கள்  எதுவும்  செய்யவில்லை”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

1எம்டிபி  மீது  வெளிநாடுகளில்  நடைபெறும்  விசாரணைகள்  பற்றி  வினவியதற்கு  மகாதிர்  இவ்வாறு  கருத்துரைத்தார்.