முகைதின் பதவி நீக்கத்தை அம்னோ அடிநிலை உறுப்பினர்கள் ஏற்கவில்லை

leadமுகைதின்  யாசின்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  அகற்றப்பட்டது  ஒரு  விவேகமற்ற  நடவடிக்கை  என்றும்  அதை அம்னோ  அடிநிலை  உறுப்பினர்களால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை  என்றும்  அம்னோ  கிளைத்  தலைவர்  ஒருவர்  சொன்னார்.

முகைதினை  நீக்கும்  முடிவானது  கட்சியைப்  பிளவுபடுத்தும்  ஒன்றாகத்தான்  கருதப்படுகிறது  என  புசாட்  பண்டார்  தாமான்  செம்பாகா  அம்னோ  கிளைத்  தலைவர்  சைட்  சைபுடின்  சைட்  ஹர்மான்  கூறினார்.

ஆனாலும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அதற்கான  அதிகாரம்  உண்டு  என்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார்.

“அடிநிலையில்  உள்ள  எங்களால்  அதை  ஏற்க  முடியவில்லைதான். ஆனால், அது  பிரதமரின்  அதிகாரத்துக்கு  உட்பட்டது. அதனால்  கேள்வி  கேட்க  முடியாது.

“என்றாலும்  அதனால்  கட்சி  உடைபடலாம்  என்பதால் அதை  ஒரு  விவேகமற்ற  செயல்  என்றே  கருதுகிறோம். கட்சி  உறுப்பினர்  என்ற  முறையிலும்  கிளைத்  தலைவர்  என்ற  முறையிலும்  அதை  ஒரு  விவேகமான  செயலாக  நான்  நினைக்கவில்லை”, என்றாரவர்.