ஸாம்: சீனர்கள் பிஎன்னை ஆதரிக்க மாட்டார்கள், அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை

zamசீனர்கள்  எப்படியும்  பிஎன்னை  ஆதரிக்கப்  போவதில்லை  அதனால்  அவர்களிடம்  மன்னிப்பு  கேட்க  வேண்டிய  அவ்சியமில்லை  என  முன்னாள்  தகவலமைச்சர்  சைனுடின்  மைடின்  கூறினார்.

சீனர்கள்  தங்கள்  மனக்குறைகளுக்குத்  தீர்வுகாண  வெளிநாடுகளின்  உதவியை  நாடினால்  அறை  வாங்குவார்கள்  என்று  கூறியதற்காக  துணை  அமைச்சர்  தாஜுடின்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்று  கோரிக்கைகள்  எழுந்திருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  சைனுடின்  இவ்வாறு கூறினார்.

“துணை  அமைச்சர்  தாஜுடின் சீனர்களிடம்  மன்னிப்பு  கேட்க  வேண்டியதில்லை.

“அதனால்  எந்தப்  பயனும்  கிடையாது. அவர்கள்  அம்னோவையோ  பிஎன்னையோ மீண்டும்  ஆதரிக்கப்  போவதில்லை”, என  சைனுடின்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.