கைருடின், சாங்மீது நாட்டின் வங்கித் தொழிலைக் ‘கீழறுப்பு’ச் செய்ததாகக் குற்றச்சாட்டு

changமுன்னாள்  அம்னோ  தலைவர்  கைருடின்  அபு  ஹாசானும்  அவரின்  வழக்குரைஞர்  மத்தியாஸ் சாங்கும்  நாட்டின்  வங்கி,  நிதியியல்  சேவைகளைக்  கீழறுப்புச்  செய்ய  முயன்றதாகக்  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

அவ்விருவர்மீதும்  குற்றவியல்  சட்டம் பகுதி  124 மற்றும்  பகுதி  34-இன்கீழ்  கூட்டாகக்  குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ்,  இங்கிலாந்து,  சுவிட்சர்லாந்து,  ஹாங்காங்,  சிங்கப்பூர்  ஆகிய நாடுகளில் செய்த  போலீஸ்  புகார்களின்  மூலமாக  அவர்கள்  இக்குற்றத்தைப்  புரிந்திருப்பதாகக்  கூறப்பட்டது.

அவர்கள்  குற்றவாளிகள்  என  நிரூபிக்கப்பட்டால் 15  ஆண்டுவரை  சிறைத்தண்டனை  பெறலாம்.