நஜிப்பை எதிர்ப்போம், கைருடின், சாங் சூளுரை

khaiமுன்னாள்  அம்னோ  தலைவர்  கைருடின்  அபு  ஹாசானும்  அவரின்  வழக்குரைஞர்  மத்தியாஸ்  சாங்கும்  இறுதிவரை  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  எதிர்க்கப்  போவதாக  சூளுரைத்தனர்.

அவ்விருவர்மீதும்  இன்று  கோலாலும்பூர்  மெஜிஸ்திரேட்  நீதிமன்றம்  ஒன்றில்  நாட்டின்  வங்கி,  நிதியியல்  சேவைகளைக்  கீழறுப்புச்  செய்ய  முயன்றதாகக்  குற்றம்  சாட்டப்பட்டது.

லாக்-அப்  உடை  அணிந்து  புன்னகையுடன்  நீதிமன்றத்துக்குள்  அடியெடுத்த  வைத்த  அவ்விருவரும்  விலங்கிடப்பட்ட  கரங்களை  உயர்த்திக்  காண்பித்தனர்.

“இறுதிவரை  நஜிப்பை  எதிர்ப்போம். நஜிப்பின் கரங்களில்  விலங்கு  பூட்ட  வைப்பேன்”, என்று  கைருடின்  தம்  ஆதரவாளர்களிடம்  கூறினார்.