ஐஎஸ் மிரட்டல் உண்மையானது; ஐஎஸ்ஏ-யைத் திரும்பவும் கொண்டுவர போடப்படும் நாடகமல்ல

isஇஸ்லாமிய  அரசு  அமைப்பு  போன்ற  தீவிரவாதிகளால்  நாடு  மிரட்டலை  எதிர்நோக்குவதாகச்  சொல்வது  உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்டத்தைத்  திரும்பவும்  கொண்டுவர  அரங்கேற்றப்படும் “நாடகமல்ல”  என்று  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

ஆனால், நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  சிலர்  இதை  நம்ப மறுக்கிறார்களே  என்று  அவர்  வருத்தம்  தெரிவித்தார்.

“நம்மில்  சிலர், இதில்  எம்பிகளும்  அடக்கம்,  ஐஎஸ்  மிரட்டல்  உண்மையானது  என்பதை  நம்ப  மறுக்கிறார்கள்.

“அவர்கள்  இதை  அரசாங்கம்  நடத்தும்  நாடகம்  என்கிறார்கள். எனவே,  எதிரணி, ஆளும்  கட்சியைச்  சேர்ந்த  எம்பிகள்  எங்களின் (ஐஎஸ் மீதான)  விளக்கக்கூட்டத்துக்கு  வர  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர். கோலாலும்பூரில்  அரச  மலேசிய  போலீஸ்  கல்லூரியில்  குற்றவியல்  விவகாரங்கள்  மீதான  கருத்தரங்கில்  கலந்து  கொண்ட  பின்னர்  காலிட்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

ஐஎஸ்  மிரட்டல்  என்று  கூறி  அரசாங்கம்  ஐஎஸ்ஏ-யைத்  திரும்பக்  கொண்டுவரப்  பார்க்கிறது  என்று  டிஏபி  எம்பி  லிம்  லிப்  எங்  கூறியிருப்பதை  ஐஜிபி  மறுத்தார்.