சைபுடின் பிகேஆரில் சேர்ந்ததில் அன்வாருக்கு மகிழ்ச்சி

azizahசிறையில்  உள்ள  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  அம்னோ  உச்சமன்ற  முன்னாள்  உறுப்பினர்  சைபுடின்  அப்துல்லா  பிகேஆரில்  சேர்ந்ததை  அறிந்து  மகிழ்ந்தாராம்.

இதை  அவரின்  துணைவியாரும்  பிகேஆர்  தலைவருமான  டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில்  தெரிவித்தார்.  வான்  அசிசா  இன்று ஒரு  வழக்கின் பொருட்டு  நீதிமன்றம்  வந்த  அன்வாரைச்  சந்தித்தார்.

“அன்வார்  உடல்நலம்  குன்றியிருக்கிறார். ஆனாலும்  அவர்  சைபுடின்  பிகேஆரில்  சேரும்  செய்தி  கேட்டு  மகிழ்ந்து  போனார்.

“மேலும்  பலர்  பிகேஆரில்  சேர  வேண்டும்  என்றும்  அவர்  விருப்பம்  தெரிவித்தார்”, என  வான்  அசிசா  செய்தியாளர்களிடம்  கூறினார்.