ஸெட்டிக்கு எதிராக போலீஸ் புகார்

ngoஜாரிங்கான்  மலாயு  மலேசியா  என்ற  என்ஜிஓ  ஒன்று  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி அக்டார்  அசீஸ்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலிக்குக்  “குழிபறிக்கிறார்”  எனப்  போலீசில்  புகார்  செய்துள்ளது.

அதன்  தலைமைச்  செயலாளர்  ஹம்டான்  முகம்மட்  சாலே  1எம்டிபிக்கு  வழங்கப்பட்ட  மூன்று  அனுமதிகள்  இரத்துச்  செய்யப்பட்டதற்கு  ஸெட்டியே  பொறுப்பு  என்றார்.

டாங்  வாங்கி  மாவட்ட  போலீஸ்  தலைமையகத்தில்  புகார்  செய்த  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  அவர், “அது சட்டத்துறைத்  தலைவரின்  நற்பெயருக்குக்  களங்கத்தை  ஏற்படுத்தவும்  அவருக்குக்  குழிபறிக்கவும்  பேங்க்  நெகாரா  தீய  நோக்கம்  கொண்டிருந்ததைக்  காண்பிக்கிறது”, என்றார்.