கிட் சியாங்: 1எம்டிபிக்கு அடுத்த பலி மகாதிரா?

vicமுன்னாள்  பிரதமர் மகாதிர்  முகம்மட்டே  1எம்டிபி-இன்  அடுத்த  “பலி” என்று டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  ஆருடம்  கூறியுள்ளார்.

“1எம்டிபி  அரக்கனுக்கு இப்போது  பலியாகியிருப்பது  நான். அதைத்  தடுத்து  நிறுத்தாவிட்டால்  மகாதிர்  உள்பட  பலர்  பலியாவார்கள்”, என  லிம்  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.

கடந்த  ஆண்டு  தொடங்கி  1எம்டிபியைக்  கடுமையாக  விமர்சித்து  வருவோரில்  மகாதிரும்  ஒருவர்.

“1எம்டிபி  அரக்கனுக்கு” இதுவரை  பலியானவர்கள்  பட்டியலையும்  லிம்  வெளியிட்டிருந்தார்.

முன்னாள் துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின், முன்னாள்  புறநகர், வட்டார  மேம்பாட்டு அமைச்சர் முகம்மட்  ஷாபி  அப்டால்,  முன்னாள்  சட்டத்துறை தலைவர்  கனி  பட்டேல்  முதலியோர்  அதில்  இடம்பெற்றிருந்தனர்.

மூவருமே  ஜூலை  மாதம்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மேற்கொண்ட  அதிரடி  நடவடிக்கையில்  பதவி  இழந்தனர்.

ஆட்சியாளர் மன்றம்கூட  1எம்டிபி  குறித்து கவலை  தெரிவித்து  அறிக்கை  வெளியிட்டிருந்ததையும்  லிம்  நினைவுறுத்தினார்