1எம்டிபி அருள் புவாவுடன் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தயார் ஆனால்………

arulதொலைக்காட்சி  நேரலை  விவாதத்தில்  கலந்துகொள்ளத்  தயரா  என்று  டிஏபி  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  விடுத்த  சவாலை  ஏற்றுக்கொள்ள 1எம்டிபி  தலைவர்  அருள் கந்தா  முன்வந்துள்ளார். ஆனால்,  ஒரு  நிபந்தனை. புவா  நாடாளுமன்றக்  கணக்குக்குழுவிலிருந்து  விலக  வேண்டும்.

நேற்று  புவா  விடுத்த  சவாலை  ஏற்றுக்கொண்டு  1எம்டிபி  பற்றிய  எல்லாக்  கேள்விகளுக்கும்  பதில்  அளிக்க  ஆயத்தமாக  இருப்பதாய்  ஓர்  அறிக்கையில்  அருள்,  கூறினார்.

ஆனால்,  புவா  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)வில்  இருக்கக்  கூடாது.

“புவா  1எம்டிபிமீது  விசாரணை  நடத்திக்  கொண்டிருக்கும்.
பிஏசி-இன்  உறுப்பினர்  என்பது அனைவரும்  அறிந்ததே”, என்றாரவர்..

“புவா  ஒரே  நேரத்தில்  நீதிபதியாகவும்  நடுவர்  குழுவாகவும்  தண்டனையை  நிறைவேற்றுபவராகவும்  இருக்க  முடியாது”, என  அருள்  கூறினார்.