நிபந்தனையைக் கைவிட்டு புவாவுடன் வாதமிட அருள் தயார்

kanda1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா   பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவாவுடன்  வாதமிடுவதற்கு  விதித்திருந்த  நிபந்தனையைக்  கைவிட்டார்.

“டோனி   புவாவுடன்  வாதமிடுவதற்கு  விதித்திருந்த  நிபந்தனையை   மீட்டுக்கொள்கிறேன். நிபந்தனையின்றி  அவரைச்  சந்திப்பேன்”, என  அருள்  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

புவா, 1எம்டிபி  விவகாரங்கள்  பற்றி  அருளுடன் தொலைக்காட்சியில்  உரையாட  தாம்  தயார்  என்றும்  அருள்  தயாரா  என்றும்  கடந்த புதன்கிழமை  சவால்  விடுத்திருந்தார்.

அருள்  சவாலை  ஏற்றார். ஆனால்  தொலைக்காட்சி  விவாதத்தில்  கலந்துகொள்ள  வேண்டுமானால்  புவா 1எம்டிபிமீது  விசாரணை  நடத்திவரும்  நாடாளுமன்ற  பொதுக் கணக்குக் குழுவிலிருந்து  விலக  வேண்டும்  என்று  நிபந்தனை  போட்டார்.