பயங்கரவாதிகளுடன் தொடர்பு: எண்மர் கைது , ஒருவர் அரசு அதிகாரி

arrestபயங்கரவாதக்   கும்பல்களுடன்  தொடர்பு  வைத்திருப்பவர்கள்  என்ற  சந்தேகத்தின்பேரில்  கைது  செய்யப்பட்டர்களில்  அரசு  அதிகாரியும்  ஒருவராவார்.

அக்டோபர்  30-இல்,  சிலாங்கூர்,  பேராக்,  ஜோகூர்  ஆகிய  மாநிலங்களில்  ஒரே  நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு  நடவடிக்கையில்  எட்டுப்  பேர்  கைது  செய்யப்பட்டதாக  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  தெரிவித்தார்.

அவர்களில்  அறுவர்  தாண்ட்ஸிம்  அல்- கைடா  மலேசியாவைச்  சேர்ந்தவர்கள்  என்றும்  இருவர்  ஐஎஸ்  தீவிரவாதக்  கும்பலுடன்  தொடர்புள்ளவர்கள்  என்றும்  சந்தேகிக்கப்படுகிறது.

“சந்தேகப்  பேர்வழிகள்  அனைவருமே  22க்கும்  36 வயதுக்கும்  இடைப்பட்ட  மலேசியர்கள். அவர்களில்  ஒருவர் அரசாங்க  ஊழியர்”, என  காலிட்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.