மாணவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிடும் காணொளியை அமைச்சு ஆராய்கிறது

knathanநேற்று சமூக வலைதளங்களில்  வேகமாக  பரவிய  இடைநிலப்பள்ளிச்  சீருடை  அணிந்த மாணவனும்  மாணவியும்  கட்டிப்பிடித்து முத்தமிடுவதைக்  காண்பிக்கும் காணொளியின்  பின்னணியைக்   கல்வியமைச்சு  ஆராய்ந்து வருகிறது.

இதனைத்  தெரிவித்த  கல்வி  துணையமைச்சர் பி.கமலநாதன்  மாணவர்களின்  செய்கை  மிகுந்த  ஏமாற்றம்  அளிப்பதாகக்  கூறினார்.

கமலநாதன்  இன்னும்  அந்த  15-நிமிட  காணொளீயைப்  பார்க்கவில்லை.

“அதைப்  பற்றிக்  கேள்விப்பட்டேன். விசாரணை   மேற்கொள்வதற்காக  விரைவில் அதைப்  பார்க்க  வேண்டும்”, என்றாரவர்.

சம்பவம்  நிகழ்ந்த பள்ளியை  அமைச்சால்  அடையாளம் காணமுடியவில்லை  என்று  கூறிய  அவர்,  தகவல்  அறிந்தவர்கள்  அமைச்சுக்கு  உதவ  முன்வரவேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.