ஐஜிபி: போலீஸ் காவலில் நிகழ்ந்த இறப்புமீது விசாரணை நடைபெறுகிறது

probeபோலீஸ்  காவலில்  இருந்த  சைட்  முகம்மட்  அஸ்லானின்  இறப்புமீதான  விசாரணை  முடிவடையும்  தருவாயில்  உள்ளது.

விசாரணை  அறிக்கை  மேல்  நடவடிக்கைக்காக  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்துக்கு  அனுப்பப்படும்  என  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“அமலாக்க  நிறுவன நேர்மைகாப்பு  ஆணையத்தின்  அறிக்கை  இறந்துபோன சைட்  முகம்மட்  அஸ்லான்  போலீஸ்  காவலில்  இருந்தபோது உடல்  ரீதியாக  துன்புறுத்தப்பட்டிருக்கிறார்  என்று  கூறுவதை  போலீஸ்  ஏற்றுக்கொள்கிறது”,  என  காலிட்  நேற்றிரவு  கூறினார்.

சம்பந்தப்பட்டவர்கள்  நீதிமுன்  நிறுத்தப்படுவார்கள்  என்றவர்  உறுதி  கூறினார்.

கடந்த  ஆண்டு  நவம்பர்   25-இல்,  அக்கைதியின்  இறப்பைத்  திடீர்  மரணம்  என்று  ஜோகூர் போலீஸ்  வருணித்திருந்தது.