டிஏபி, கடந்த மாதம் ஆட்சியாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து துண்டறிக்கையாக்கி அதை மலாய்க் கிராமப்புறங்களில் விநியோகம் செய்யவிருப்பதாக கூலாய் எம்பி டியோ நை சிங் கூறினார்.
ஆட்சியாளர்களின் அறிக்கை முக்கியமான அறிக்கை என்றபோதிலும் ஊடகங்களில் அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றாரவர்.
எனவேதான் டிஏபி, அவ்வறிக்கையை மக்கள் நன்கு புரிந்துகொள்வதற்காக அதன் ஒரு பகுதியை எடுத்து 100,000 பிரதிகள் அச்சிட்டுள்ளது.
“டிஏபி, மலாய் மொழியில் அமைந்த ஆட்சியாளர் மன்றத்தின் அறிக்கையை 100,000 பிரதிகள் அச்சிட்டிருக்கிறது. அந்தத் துண்டறிக்கை மலாய்க்காரர்கள் வாழும் கிராமப்புறங்களில் விநியோகம் செய்யப்படும். அதன் மூலமாக மலேசிய மக்கள் நாட்டு நடப்பைத் தெளிவாக புரிந்து கொள்வார்கள்”, என டிஏபி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டியோ கூறினார்.


























நீங்கள் கொடுப்பதற்கு முன்னரே அம்னோ அவர்களுக்குச் சாதகமாக் 200,000 துண்டறிக்கைகளைக் கிராமப்புறங்களுக்குக் கொண்டு சேர்த்து விடுவார்கள்!
டிஏபி ஏன் இன்னும் பணத்தை விரயம் செய்ய போகிறது. நாட்டில் உள்ள படித்த மக்களே ஆட்சியாளர்கள் சொல்வதை ஏற்கவில்லை. அப்படி இருக்கையில் ஏன் இந்த முயற்சி. கிராமப்புறங்களில் வாழும் மலாய்க்காரர்களுக்கு ஒரு மாடு அறுத்து சோறு போட்டு டிஏபி பொய்யாக கூறுகிறது. ஆட்சியாளர்களுக்கு நாங்கள் விளக்கம் அளித்துட்டோம் என்று கூறி உங்கள் அறிக்கையினை பொய்யாக்கிவிடுவார்கள். டிஏபி யோசித்து செயல் படுவது நல்லது.
அடி வாங்காமல் திரும்பினால் லாபம்,நாராயண நாராயண.