2010-இல் உள்துறை அமைச்சு பறிமுதல் செய்த கேலிச்சித்திரக்காரர் ஸூனாரின் ‘1Funny Malaysia’, ‘Perak Darul Kartun’ கேலிச்சித்திர புத்தகங்களை அவரிடமே திருப்பிக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப் தலைமையில் ஐவரடங்கிய நீதிபதிகள் குழு, புத்தகங்களுக்கான தடையைத் தள்ளுபடி செய்த முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்தி, புத்தகங்கள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
பொது ஒழுங்குக்கு மிரட்டல் என்று கூறி உள்துறை அமைச்சு 2010, மே 10-இல் அப்புத்தகங்களுக்கு அச்சக, வெளியீட்டகச் சட்டத்தின்கீழ் தடை விதித்தது.
மலேசியாகினியும் ஸுனாரின் செபக்காட் எபக்டிவ் நிறுவனமும் புத்தகங்களை வெளியிட்டிருந்தன.
2010 தடையை எதிர்த்து வெளியீட்டாளர்கள் வழக்கு தொடுத்தனர். உயர் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளித்தது.
பின்னர் முறையீட்டு நீதிமன்றம் சென்றார்கள். அது உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.
திருப்பிக் கொடுக்கும் போது அது புத்தகங்களாக இருக்காது! அதற்குப் பதில் அந்தப் புத்தகங்கள் மீண்டும் அச்சடித்துக் கொடுக்கப் பட வேண்டும்!
நீதிபதிகள் குழு 2010ம் ஆண்டு முதல் இந்த புத்தகம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் (எத்தனை புத்தகம்) என்று ஓரு உகமா கணக்கிட்டு அத்தொகையினை நட்ட இடாக உள்துறை அமைச்சு கேலிச்சித்திரக்காரர் ஸூனாருக்கு செலுத்த ஆணையிட்டுருக்க வேண்டும்.
நஷ்ட ஈடு எல்லா விடயங்களையும் கணக்கில் எடுத்து கணக்கிடப்படவேண்டும். உள்துறை அமைச்சு நாதரிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கவேண்டும். என்ன சொன்னாலும் ஏறாது– காரணம் எல்லாம் மக்களின் பணம்.