அப்துல் கனி பட்டேலுக்குப் பதிலாக சட்டத்துறை தலைவராக(ஏஜி) நியமிக்கப்பட்ட முகம்மட் அபாண்டி அலி அதற்கான காரணத்தைத் தெளிவாக எடுத்தியம்ப வேண்டும் என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
அபாண்டியின் ஏஜி நியமனம் ஒரு திடீர் முடிவு. அதற்கான உண்மையான காரணங்கள் தெரியவில்லை.
“அதைத்தான் நாடே தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது. எதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்?”, என்று மலேசியாகினியிடம் பேசியபோது ஜைட் வினவினார்.
1எம்டிபிமீது கனி தலைமையில் சிறப்புப் பணிக்குழு ஒன்று விசாரணை நடத்திக்கொண்டிருந்த வேளையில் அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
பொறுப்பேற்று ஓரு வாரம்கூட ஆகியிருக்காது, அபாண்டி பணிக்குழுவைக் கலைத்தார். விசாரணை அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.
“இவ்வளவு நடந்திருக்க அபாண்டி உண்மையான காரணங்களைத் தெரிவித்திருந்தால் அவரது நேர்காணல் பொருளுள்ளதாக இருந்திருக்கும்”, என முன்னதாக ஜைட் அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறினார்.
அபாண்டி மலேசியன் இன்சைடருக்கு வழங்கிய நேர்காணல் பற்றித்தான் அவ்வாறு குறிப்பிட்டார்.
“கனியை வெளியேற்றியதற்கான காரணத்தை பிரதமர் அவரிடம் தெரிவித்தாரா? அவரிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டது? பணிக்குழுவுக்குத் தடை விதிப்பா? உண்மையைச் சொல்லுங்கள்”, என்றவர் டிவிட்டரில் கூறினார்.
கனிக்கு “உடல்நலன் சரியில்லை” என்று காரணம் கூறப்பட்டு அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ஆனால், நவம்பர் 3-இல் பொது நிகழ்வு ஒன்றில் முகம் காட்டிய அவர் பணியில் இருந்தபோது சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை செய்து கொண்டிருந்தாலும் “திடமாகவே இருந்ததாக”க் கூறினார்.
ஐயா சைட் இப்ராகிம் உமக்கு தெரியாதா இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று? எல்லாம் அதிகார துஷ் பிரயோகம் தானே? அம்னோ ஈன ஜென்மங்களுக்கு வேறு என்ன தெரியும்
“உண்மை”-யான காரணங்கள் நேர்மைக்கு மாறாக இருப்பதால்தானே “பொய்யை” திரும்ப திரும்ப சொல்லி “உண்மை”-யாக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு கால அவகாசம் தேவை இல்லையா ? அதனால் உங்கள் கேள்விக்கு உடனடி “உண்மை” பதில் கிடைக்கும் சாத்தியம் இல்லை. “பொய்யை” – “உண்மை”-யாக்கும் முயற்சி வெற்றி அடைந்தால், உங்கள் கேள்விகளுக்கு “உண்மை”-யை சொல்லி விடுவார்கள். கவலை படாதீர்கள்.
தகுதி திறமை என்பது இங்கு எங்கே இருக்கிறது? யார் அதைப்பற்றி கவலைப்படுகின்றனர்? யார் நன்றாக சப்புகிரானோ அவனுக்கு தானே எல்லாம்?
இரு வாரம் கால தாமதம் செய்திருந்தால், மாமா கூட்டம் பிரதமரை கவிழ்த்து விட்டிருப்பார்கள். அதனால்தான் அதிரடி மாற்றம்! அலி அம்சாவுக்குக் கூட பொய் சொல்ல தெரியவில்லை. உண்மையையே பேசுவோர் சங்கத்திற்கு அவரை செயலாளராக தேர்ந்து எடுக்கலாமா?