முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்க வழக்குரைஞரின் “தனிப்பட்ட விருப்பத்தின்” அடிப்படையில் வழக்குகள் தொடுக்கப்படாமல் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் வழக்கு தொடுப்பதற்கான வரன்முறைகளை வரையறுத்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
மலேசியாவில் ஒரு வழக்கைத் தொடுப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் முழு அதிகாரமும் ஏஜியிடம்தான் உள்ளது என ஊழலுக்கு எதிரான மலேசியாவின் போராட்டம் மீதான கருத்தரங்கில் தலைமையுரை ஆற்றிய மகாதிர் கூறினார்.
“பில்லியன் கணக்கான டாலர்கள் வழக்கு ஒன்றில் அதில் சம்பந்தப்பட்டிருப்பது தனக்கும் மேலே உள்ளவர் என்பதால் நடவடிக்கை இல்லை என ஏஜி தீர்மானித்தால் நம்மால் எதுவும் செய்ய இயலாது”, என மகாதிர் கூறினார்.
ஏஜி தப்பான முடிவு செய்தால்கூட மக்களால் எதுவும் செய்ய முடியாது.
எனவேதான் ஏஜியின் முடிவெடுக்கும் பொறுப்பை அகற்ற வேண்டும். அதனிடத்தில் வழக்குகள் தொடுப்பதற்கான வரன்முறைகளை வரையறுத்து வைத்திருக்க வேண்டும் என்றவர் பரிந்துரைத்தார்.
நீர் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் இதை நீ பதவியில் இருக்கும் பொழுது செயலையே, செய்யவும் விடலேயே? ஏனையா? நல்ல இருந்த நீதி நிர்வாகத்தை கொலை சித்தே நீ தானே? ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புலப்படுகிறது, நீ ஜெயில் சாப்பாடு சாப்பிடாமல் சாக மாட்டாய்.
ஜெயில் சாப்படோடே இவன் menu லே கொஞ்சம் செருப்படி,தொடப்பு கட்டை அடி..ன்னு அன்றாடம் சேர்த்துக்க சொல்லுங்க! நம்ம உரிமை பெரும் பகுதியை ஏப்பம் விட்டுட்டான் இந்த காக்கா!!!
ஹி ஹி ஹி he is tasting his own medicine today .ஆடிய ஆட்டம் என்ன ? பேசிய வார்த்தை என்ன ?..
தனக்கு வலியென்றால் வரன்முறைகள் வகுக்கப் பட வேண்டும்!இதுவே நீர் ஆண்ட காலத்தில், உச்ச நீதிமன்றம் ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கும், அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கும் எதிராக ஒவ்வொரு முறையும் தீர்பளித்த பொழுது சட்டத்தின் கையை முறித்து சனநாயகத்தை ஒழிக்க சட்டத்தையே மாற்றியவர் நீர்தானே? அன்றே அரசாங்க தலைமை வழக்கறிஞருக்கு அரசியல் சாசனத்தில் கொடுக்கப் பட்டிருந்த அதிகாரம் உமக்குத் தெரியாதா? மாநில சமஸ்தானதிபதிகளின் தலையில் கை வைக்கத் தெரிந்த உமக்கு, அரசாங்க தலைமை வழக்கறிஞரின் அதிகாரத்தை ஒரு வரம்புக்கு உட்படுத்த உமக்குத் தெரியாமல் போனது ஏனோ? அனைத்தும் என்றும் பிரதமர் என்பாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்ற ஒரு சர்வாதிகார ஆளுமை திட்டத்தை கொடுத்து விட்டுச் சென்றாய். அச்செய்வினைப் பயன் இன்றும் உம்மைத் தாக்கும் பொழுது நீலிக் கண்ணீர் வடிக்கின்றாய். என்னே உமது கட்சிக்காரர்களின் நடிப்பு! நாடகம்!. நீர் செய்த வினை இந்நாட்டை சீர்குலைக்க ஆரம்பித்து உள்ளது. இனியும் இந்நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உண்டா?