மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அடுத்த ஆண்டிற்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டை பாதியாகக் குறைப்பதை விட “வருந்தும் தன்மையற்ற, எதிர்மறையான இயல்புள்ள, பிளவுப்படுத்துகிற” தேசிய குடியியல் பயிற்சி இலாகாவை (பிடிஎன்) மூடிவிடுவது நல்லது என்று டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான கிட் சியாங், சுஹாகாம் ஆணையத்தின் 2016 ஆம் ஆண்டிற்காக பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை இந்த ஆண்டின் ஒதுக்கீடான ரிம10 மில்லியனிலிருந்து ரிம5.5 மில்லியனுக்கு குறைத்திருப்பது மலேசியர்களின் ஜனநாயாக மற்றும் மனித உரிமைகள் மீதான வேட்கைக்கு பிரதமர் நஜிப்பிடம் அனுதாபம் இல்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.
பிடிஎன்னுக்கு 2016 ஆண்டு பட்ஜெட்டில் ரிம50 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை லிம் சுட்டிக் காட்டினார்.
முன்னாள் உயர்மட்ட மலேசிய அரசுப் பணியாளர்களின் அமைப்பான ஜி25 பிடிஎன்னை ஒரு “தீவிர மலாய்-இனவாத” அமைப்பு என்று கண்டித்திருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
“பிடிஎன்னின் வருத்தப்படும் தன்மையற்ற, பிடிவாதமான, தேசிய எதிர்ப்பு மனப்பாங்கை அதன் இயக்குனர் ராஜா அரிப் ராஜா அலி பல தலைமுறைகாளாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்களை வந்தேறிகள் என்று கூறியிருப்பதின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்”, என்று லிம் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் நஜிப் இந்நாட்டு சீனர்களும், இந்தியர்களும் “மலேசியாவின் மைந்தர்கள்” என்று அவர்களுக்கு உறுதியளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், பிடிஎன்னின் இயக்குனர் ராஜா அரிப் அவர்களை வந்தேறிகள் ஏளனப்படுத்தும் வகையில் கூறியிருப்பது மட்டு மீறிய மற்றும் மன்னிக்க முயாததாகும் என்று கிட் சியாங் சாடினார்.
சீனர்களையும் இந்தியர்களையும் இழிவுபடுத்தும் வந்தேறிகள் என்ற சொல்லை பிடிஎன் இயக்குனர் ராஜா அரிப் பயன்படுத்தியதற்காக அவரை அமைச்சரவை கண்டிக்குமா என்று அவர் வினவினார் [பிடிஎன் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும்.]
ஏதாவது ஒரு தலைப்பை கொடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதே வாடிக்கையாகிவிட்டது,அவர்கள் சொல்வதால் நாம் வந்தேறி ஆகிவிட போவதில்லை,ஒபமா வருகை முற்றாக வுனர்த்திவிட்டது மலைசியா யாருடையதென்று.அகோங் அரண்மனையில் ஒபாமா முதல் வரிசையிலும் அதன் கீல் ஆகுங் மற்றும் அவரின் துணைவியாரும்,அதன் கீல் வரிசையில் பிரதமர் மற்றொரும் அமர்ந்ததை மறந்து விட்டீரோ.நஜிப் நம்மை போன்றோருக்கு செய்த மாபெரும் கைம்மாறு மற்றும் மலாயுவுக்கு பெருத்த இடி ஆகும்.நஜிப் வும்நோவுக்கு ஆதரவாக கை வுயர்தினாலே போதும்,அவர்மீது நடத்தப்படும் எல்லா போராட்டமும் முடிவை பெரும்.ஏன் மலாய் சமுகம் நஜிப்பை எதிர்கிறது தெரிந்து கொண்டால் / ஒபாமாவை அழைத்ததின் நோக்கம் வுனர்ந்தால் நன்று,
வாழ்க நாராயண நாமம்.
PTN யை மூடி அதற்கு கொடுக்கப்படும் நிதியை பொது மக்களுக்கு கொடுத்து உதவுங்கள்.
எனக்கும் சம்திங், சம்திங் வெட்டினா நஜிப்பை தூக்கிப் பிடிப்பேனாக்கும்! மக்கள் பணம் வெட்டியா செலவு செய்யுனும்ன்னா வெட்டிபயப் புள்ளைங்கள வெட்டியா வேலைக்கு வைத்திருக்கும் சத்திரத்திர்க்குப் பெயர் பி.டி.என்.& ஜாசா.
செம்பருத்தி கோம் வாசகர் கவனத்திற்கு, அரசாங்கத்தால் நடத்தப்படும் பிடிஎன், பிஎல்கேஎன், மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு ஆண்டு 7 நாள் பயிற்சி எல்லாம் 98% மலாய்காரர்களுக்கு வாழ வழி வகுக்கிறது. 98% மலாய்காரர்களுக்கு வாழ்விக்கும் இத்தகைய திட்டங்களை மூடு என்று யார் கூறினாலும் எடுபடாது.