2016 பட்ஜெட்டில் உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் 1.4 பில்லியன் வெட்டு விழுந்திருப்பது பிஎன்னுக்கு இளைஞர்களின் ஆதரவு மேலும் குறைவதற்கு வழிகோலும் என பிகேஆர் வியூக இயக்குனர் சிம் ட்ஸே ஸின் இன்று எச்சரித்தார்.
“13வது பொதுத் தேர்தலில் 21-க்கும் 25 வயதுக்குமிடைப்பட்ட இளைஞர்களின் ஆதரவு 46 விழுக்காடுதான் பிஎன்/அம்னோவுக்குக் கிடைத்தது.
“தொடர்ந்து ஈராண்டுகளாகக் கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைப்பது அந்த வயதினரிடையே ஐயப்பாட்டை வளர்க்கும்”. என பாயான் பாரு எம்பி-யுமான சிம் கூறினார்.
இந்நடவடிக்கை, அரசாங்கம் இளைஞர்களின், குறிப்பாக பட்டப்படிப்பு பயில்வோரின் ஆதரவைப் பெறும் நம்பிக்கையைக் கைவிட்டிருப்பதுபோன்ற தோற்றத்தை உண்டு பண்ணலாம்.
“அரசாங்கம் (பட்ஜெட்டில்) இளைஞர்களின் உயர்கல்விக்கு முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.
“ஆனால், நிதி அமைச்சராகவுமுள்ள பிரதமர் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கான ஒதுக்கீட்டில் ரிம1.4 பில்லியனைக் குறைத்து அதே நேரத்தில் பிரதமர் துறைக்கான ஒதுக்கீட்டில் ரிம1 பில்லியனைக் கூட்டியிருக்கிறார்”, என்று சிம் கூறினார்.
இன்னும்கூட காலம் கடந்து விடவில்லை. தவற்றைத் திருத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது என்றாரவர்.

























யோவ்! அரசாங்கத்தின் கஜானா காலி. நிலைமை தெரியாம பேசாதிங்க. அவங்க என்ன பணத்தை வச்சிக்கிட்டுக் கொடுக்க மாட்டோம் என்றா வஞ்சனை செய்கின்றார்கள். அங்க பணம் இல்லை. தங்கக் கரண்டியில் ஊட்ட முடியவில்லை. இப்ப இருக்கின்ற நிலைமைக்கு ஈயக் கரண்டியில் ஊட்டினாலே போதுமென்ற மனசோட வாங்கிக்கிங்கோ.
செலங்கோரில் மாநில குடும்ப அரசியலில் நடத்தாத நாடகமா
நாராயண நாராயண.
இந்த காயு அம்முவை ஒரு நாள் கண்டுபிடித்து சரியாக வாங்கி கட்டிகொள்ளபோகிறான்