சுமார் 250 டெக்சி ஓட்டுனர்கள் இன்று கோலாலும்பூர் பாடாங் மெர்போக்கில் ஒன்றுதிரண்டு நில, பொதுப் போக்குவரத்து ஆணைய(ஸ்பாட்)த்க்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் “உபர்டெக்சி” “கிராப்கார்” போன்றவற்றைத் தடை செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.
கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த அவர்கள் “ஹிடுப் டெக்சி” என முழக்கமிட்டனர். “வேண்டாம் உபர்”, “பிரதமரே, உதவுங்கள்” என்ற வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
சிலர் அவர்களின் கார்களின் ஹாரன்களில் ஒலி எழுப்பினார்கள். வேறு சிலர் வுவுசுலா ஊதுகுழல் கருவிகளை ஊதி ஒலி எழுப்பினார்கள்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பாஸ் மத்திய குழு உறுப்பினர் நசருடின் தந்தாவியையும் காண முடிந்தது.
டாக்சி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இந்தியர்கள். ஆகவே, உங்களை அரசாங்கம் அவ்வளவாக கவனிக்காது.
நசருடின் தந்தாவி அரசியல் இலாபம் தேட அங்கே போனாரோ?
முதலில் டாக்சியை அங்கே அங்கே பார்க் பண்ணி விட்டு தூங்குவதை
டாக்சி ஓட்டுனர்கள் தவிர்க்க வேண்டும். டாக்சி கிடைக்காட போடு நாங்கள் ஊபரையொ எதையோ பாவித்து போனால் இவர்களுக்கு என்ன? தூக்கத்தை கொண்டினு பண்ணுங்கள். உங்களை தேடி ஒரு மாங்க மடையன் வராமலா போவன். அது போதும் உங்களுக்கு. நீங்கள் தான் டாக்சியை போட்ட இடத்தில் இருந்து நகர மாட்டிர்களே .
விரல் விட்டு எண்ணக்கூடிய டாக்ஸி ஓட்டுனர்களே மீட்டர் போட்டு ஓடுகிறார்கள். கூடுதலானவர்கள் ஆளை பார்த்தே பணத்தை கேட்கிறார்கள் .சாதரணமாக 5 வெள்ளி வசூலிக்கும் தூரத்துக்கு 20 வெள்ளி கேட்கிறார்கள்.சில டாக்ஸி ஓட்டுனர்களிடம் பேசவே முடியாது .இதற்கான சரியான தெரிவு uber மற்றும் கிராப் கார்களே.
spad லஞ்ச ஊழல் பேர்வழிகள்