இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவில் ரிம800 மில்லியன் கூடியதற்கு குத்தகையாளர்கள் வேலையைத் தாமதப்படுத்தியதுதான் முக்கிய காரணம் என்றாலும் புத்ரா ஜெயாவுக்கும் ஓரளவு பொறுப்புண்டு.
இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கிழக்குக் கரை நெடுஞ்சாலை மீதான அதன் அறிக்கையில் தெரிவித்த பொதுக் கணக்குக்குழு (பிஏசி), வருங்காலத்தில் நெடுஞ்சாலை குத்தகைகளை வழங்கும்போது தகுதியுடைய குத்தகையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
அந்த நெடுஞ்சாலையைக் கட்டணம் செலுத்தும் சாலையாக மாற்ற அரசாங்கம் முடிவு செய்ததும் கட்டுமானச் செலவு அதிகரித்ததற்கு ஓரளவு காரணமாகும் என்றும் அது குறிப்பிட்டது.


























இந்த அரசாங்கம் “தகுதியுடைய குத்தகையாளர்களை” எப்பவும் தேர்ந்தெடுத்ததில்லை.
எது தவறாக ஆனாலும் அது புத்ரஜெயாவின் கையால் ஆகாதனத்தினாலும் ஊழலில்னாலும் தான் — எந்த வேலை கொடுத்தாலும் அதை மேல் பார்வையில் வைத்திருப்பதற்கு கொடுத்தவர்தான் பொறுப்பு– இங்குதான் எல்லாமே சொந்தக்காரன் கட்சிக்காரன் சப்பிகள் ஜால்றக்களுக்குதான் எல்லாம் கொடுக்கப்படுகிறது–பிறகு என்ன எதிர் பார்க்க முடியும்? EDL -என்ற இந்த விரைவு சாலை திறந்து 3 ஆண்டுகள் கூட ஆக வில்லை ஆனால் அதன் இன்றைய நிலை_பார்த்தால் புரியும் ஆனாலும் கேட்க நாதி இல்லை– எத்தனை பில்லியன் யாருடை வங்கி கணக்கில் இருக்கிறதோ?