மத்தியாஸ் சாங், கைருடின் அபு ஹாசான் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பாராட்டியுள்ளார்
அவ்விருவரும் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பாதுகாப்புக் குற்றங்கள் சட்டத்தின்கீழ் வரவில்லை என்பதால் அவர்களைப் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்தது.
“நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இனி, இதுவே நீதிபதிகளின் நிலைப்பாடாக இருத்தல் வேண்டும். அவர்கள் தீர்ப்பளிப்பதில் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க வேண்டும்”, என மகாதிர் கூறினார்.
சாங் மகாதிரின் அரசியல் செயலாளராக இருந்தவர். கைருடின் அண்மையில் கட்சிநீக்கம் செய்யப்பட்ட அம்னோ தொகுதித் துணைத் தலைவர்.


























அப்படின்றால் அவர்களை சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட அனுமதி அளித்த அரசாங்க தலைமை வழக்கறிஞர் ஒரு வெங்காயமா? இதே மாமக்தீர் பழைய அமீனோ கட்சி சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்பளித்தபோது என்னமா கூப்பாடு போட்டார் தெரியுமா?
காக்க்காதிர் உங்கள் ஆட்சிகாலத்தில் அடக்குமுறை அதுவும் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.அப்பொழுது எங்கே போயிற்று நீதி நேர்மை ? தென்னிந்திய தொழிலாளர் நிதி கலைப்பு அதற்கு ஒரு சான்று.இனத்துவாதம் செய்து தமிழர்களை ஒடுக்கி அடக்கு முறையில் ஆட்சி செய்தது எப்பொழுதும் மறக்க முடியாது.
மலேசியாவில் என்ன ………….. நீதி இருக்கு ஒன்னும் இல்லை