பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிர்ப்புக் கொடி காட்ட யாரோ சிப்பாங் அம்னோவைத் தூண்டி விட்டிருக்கலாம் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் சந்தேகப்படுகிறார்.
“அந்தக் கிளைத் தலைவர்கள்தான் இதைச் செய்தார்களா அல்லது யாராவது அவர்களை ஆட்டுவிக்கிறார்களா என்பதைக் கண்டறிவோம்”, என தெங்கு அட்னான் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று சிப்பாங் அம்னோ உறுப்பினர்கள் சுமார் 20 பேர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது பற்றிக் கேட்டதற்கு தெங்கு அட்னான் அவ்வாறு கூறினார்.
இதற்கு முன்பு அக்டோபர் 13-இல் தெலோக் கெமாங் அம்னோ கிளையைச் சேர்ந்தவர்கள் இதேபோன்று நஜிப்பின் விலகலுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
“அதை விசாரித்தபோது அங்கு (நஜிப்புக்கு) பெரிய எதிர்ப்பு இருப்பதுபோல் தெரியவில்லை.
“யாரோ அம்னோவை உடைக்க முயல்கிறார்கள்”, என்று தெங்கு அட்னான் கூறினார்.

























“யாரோ அம்னோவை உடைக்க முயல்கிறார்கள்”! ஏன் உங்கள் ‘ட்விட்’ போலிசாரால் அந்த “யாரோ”வை கண்டு பிடிக்க முடியவில்லையா? இன்னமோ அந்த “யாரோ” கண்ணுக்குத் தெரியாத பேய் என்று நினைத்துக் கொண்டு இவர் பேசுகின்றார்.
தெரங்கானு எம்.பி,இப்படிதான் முயற்சித்தார் பதவி போனதே ஆனால் ஒன்றும் நகர்த்த முடியவில்லை.
பிரதமர் பதவி சும்மாவா,அதற்குதான் எதிரணி எதை எதையோ வுலறி வருகிறது.போர்னியோ விவகாரத்தில் நாட்டை கைபற்றலாம் கனவுகண்டு மக்கள் ஆதரவு தேவை இல்லை போன்று நடந்துகொண்டது,அடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம்,தீர்மானம் கொண்டுவந்தவரே மீட்டுகொண்டார்,வான் வொப்புக்கொண்டார் நஜிப் இந்நாட்டு பிரதமர் யென்று.
அடுத்து தேர்தல்,வரும் தேர்தலில் எதிரணி அதிக மக்கள் ஆதரவை இழக்கும்,முன்னாள் எம்.பி / பாஸ் மற்றும்2 காரணங்களால்,
வாழ்க நாராயண நாமம்.