1எம்டிபி-இன் துணை நிறுவனமான எட்ரா எனர்ஜி சீனா- கத்தார் கூட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டால் மின் கட்டணம் கூடும் சாத்தியம் இருப்பதாக பாண்டான் எம்பி ரபிஸி ரம்பி எச்சரிக்கிறார்.
அந்த அனைத்துலக நிறுவனம் பெரும் விலைக்கு எட்ராவை வாங்குவதால் இது நடக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
எட்ராவின் விலை ரிம8 பில்லியன்தான். ஆனால் சீனா-கத்தார் கூட்டு நிறுவனம் ரிம10 பில்லியன் கொடுக்க முன்வந்துள்ளது.
“ரிம2 பில்லியன் கூடுதலாகக் கொடுக்கும்போது, அதைத் திரும்பப் பெறப் பார்ப்பீர்கள், இல்லையா.
“அதற்காக மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அஞ்சுகிறேன்”, என்று ரபிஸி குறிப்பிட்டார்.


























இதற்கெல்லாம் போய் பயப்படலாம? GST வந்தே மக்கள் பயப்படாமல் வரியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இனி எந்த வரி வந்தா என்ன? எந்த கட்டணம் ஏறனா என்ன? மலேசியா மக்கள் ரொம்பவும் நல்லவர்கள். எவ்வளவு அடிச்சாலும் உதைத்தாலும் தங்கிக் கொள்வார்கள். எதையும் கேள்வி கேட்க மாட்டார்கள். சும்மா கருத்து மட்டும் சொல்வார்கள்! பாஸ் கட்சி மாதிரி.
ஆனால் எந்த தகுந்த காரணமின்றி தண்ணீர் கட்டணம் வுயர்துவீர் அப்படிதானே,
வாழ்க நாராயண நாமம்.
தண்ணீர் கட்டணம் மிக அதிகமா அஸ்ட்ராலியா மாதிரி அளவு தண்ணீர்
நிலைக்கு போக வெகு துராம் இருக்கு கை . ஆனால் மின் கட்டணம் தொட்டால் சோக் அடிக்கும் நிலைமைக்கு போய் கொண்டிருக்கிறது .
நீங்கள் தண்ணிரை பற்றி கவலை படுகிரிர்கள் .அந்தோ பாவம் மலேயசியர்கள்.
பரவாயில்லை நம்ம BN க்கு வோட்டு போட்ட …………. மக்கள் கட்டுவணுங்க