ஒரு விருந்தில் ஆமை முட்டைகள் சாப்பிட்டதாகக் கூறப்படுவதை புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் மறுத்தாலும் சாபா ஆமைகள் பாதுகாப்பு மையத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் படங்கள் அவர் முட்டைகள் சாப்பிடுவதைத் தெளிவாகக் காண்பிக்கின்றன.
அப்படங்கள் இஸ்மாயில் சப்ரியின் முன்னால் உள்ள ஒரு சிறு தட்டில் ஆமை முட்டைகள் இருப்பதையும் அவரது தட்டில் இரண்டாக உடைக்கப்பட்ட முட்டை ஒன்று இருப்பதையும் காண்பிக்கின்றன.
இதன் தொடர்பில் இஸ்மாயில் சப்ரியின் எதிர்வினையைப் பெறுவதற்கு மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் அமைச்சர் அவ்விருந்தில் மீன் மட்டுமே சாப்பிட்டதாகக் கூறினார்.
ஆனால், அவர் முட்டை சாப்பிடுவதைக் காண்பிக்கும் படங்கள் இணையவெளியில் வெளியானதை அடுத்து உயிரினப் பாதுகாவலர்கள் அவரைச் சாடினர்.
ஆமை முட்டைகள் சேகரிப்பது தீவகற்ப மலேசியாவில் சில கட்டுப்பாடுகளூடன் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சாபாவில் ஆமை முட்டைகள் சேகரிப்பதும் விற்பதும், சாப்பிடுவதும் குற்றமாகும்.
அக்குற்றச்செயலுக்கு ரிம50,000 அபராதம் அல்லது ஐந்தாண்டுச் சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
சாப்பிட்டதை ஒப்புக் கொள்ளக் கூட மனமில்லாத மனிதர்.
மக்கள் பணத்தில் திருட்டு தீனி தின்னும் இவன் எப்படி அய்யா ஒப்புகொல்வான் MIC கேவலம் இவனுங்க அவனை விட கேவலமானவணுங்க
இவர் மேல் எந்த கேஸ் போட்டாலும் செல்லாது செல்லாது.பெபாஸ் இவர் ….
மந்திரியாரே ஆமை முட்டை சாப்பிட்டது ஏன் என்றுதானே கேள்வி? இதற்கு இந்து சமயம் மாட்டிறைச்சி விவாதம் எதற்கு? மலாய்க்காரன் திருமண நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி இருக்கும்.இந்துக்களும் நிகழ்வில் கலந்து கொள்வர் அனால் உண்பது இல்லை என்ற விவாதம் இதற்கு ஒப்பிடுவது உனக்கு தேவையல்லாத ஒன்று.இந்து சங்கமே எங்கே உங்கள் அறிக்கை ?
அமைச்சர் ஆமை முட்டை என்ன ! டைனசோர் முட்டையை கூட சாப்பிடட்டுமே அதற்கென்ன இப்போது ? .பல அமைச்சர்கள் கிடைப்பதஎல்லாம் திமிங்கிலம் போல் விழுங்குகிரார்களே (ஊழல் ) அதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வழி ஏதும் உண்டா என யோசிங்கப்பா .