மேலும் அதிகமான இந்திய உயர்கல்விப் பட்டங்களை, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்(ஐடி), பொறியியல் பட்டங்களை அங்கீகரிக்க மலேசிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
புத்ரா ஜெயாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுகள் நடத்திய பின்னர் அவருடன் செய்தியாளர் கூட்டமொன்றில் கலந்துகொண்ட நஜிப், மேலும் அதிகமான இந்திய பட்டங்களுக்கு, குறிப்பாக ஐடி, பொறியியல்துறை பட்டங்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமாய் மோடி கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
மலேசியர்களில் பலர் இந்தியாவில் கல்வி, குறிப்பாக மருத்துவக் கல்வி கற்றிருப்பதை நஜிப் சுட்டிக்காட்டினார்.
“உரிய நடவடிக்கை எடுத்து இந்தியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவோம்.
“இது இந்திய பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்பக் கல்லூரிகளும் வழங்கும் இன்னும் அதிகமான பட்டப்படிப்பை அங்கீகரிக்க வழிகோலும். மலேசியர்கள் இந்தியா சென்று பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பாகவும் அமையும்”, என்றாரவர்.
27வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மோடி மலேசியா வந்திருக்கிறார்


























“இந்தியா சென்று பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பாகவும் அமையும்,” யார் சென்று படிக்க வாய்ப்பாக அமையும்?. அரசாங்க அங்கீகாரம் பெற வேண்டுமானால் இண்டிய பல்கலைகழகங்கள் அரசாங்க கல்வி உதவித் தொகைப் பெற்ற மாணவர்களுக்கு முதலில் இடம் கொடுக்க வேண்டும். பின்னரே தனியார் மாணவர்களுக்கு இடம். இந்த உள்குத்து வேலைகள் எல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்ன? அப்படித்தானே மணிப்பால் மருத்துவ பல்கலைகலகத்திலும், இராமையா பல்கலைகலகத்திலும் நடந்தது. அப்படித்தானே, ஜப்பான், தென் கொரியா என்று இதர நாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் அரசாங்கம் மூலமாக செல்லும் மாணவர்கள் அங்கீகரிக்கப் பட்ட பல்கலைகழகங்களில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். மாரா எப்படி மாணவர்களை வெளிநாட்டு பல்கலைகழகத்திற்கு அனுப்பி படிக்க வைக்கின்றது?
இந்த ஜீவியானாவுக்கு ஏதாவது செய்யுங்கப்பா அவர் மலீசிய மாணவி . கேரள முதல்வரிம் இருந்து சாண்ரிதழ் பெற்றுள்ளார் . ஆனால் மருத்துவம் படிக்க முடியாமல் தவி கிறார். அவரும் நேதாஜி வழி தோன்றல் தானே . ஐயா மோடி ஜீவியானாவுகு ஜீவிதம் கொடுங்கள்
இந்திய பல்கலகத்தில் படித்த மாணவனை அமெரிக்க அங்கரிகின்றது அனால் அதே மாணவனை மலேசியா அங்கரிகவிலை இதட்கு என்ன கரணம்?
ஒரு வேலை அமெரிக்க கல்வி அமைச்சரை விட நம் மலேசியா கல்வி அமைச்சர் படு புத்திசாலியாக இருபாரோ
இந்தியாவிற்கான விசா கட்டணம் உயர்ந்துகொண்டே போகிறதே. என்ன காரணம்?