பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரைப் பதவி விலகக் கோரும் 34 அம்னோ கிளைகளுக்குப் பின்னே இருந்து கொண்டு செயல்படுவது யார் என்பதைத் தம்மால் ஊகிக்க முடிகிறது என அம்னோ உதவித் தலைவர் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
34 கிளைகளுக்குப் பின்னணியில் ஒரு சூத்திரதாரி இருப்பதை உணர முடிவதாக துணைப் பிரதமருமான அவர் குறிப்பிட்டார்.
“மூத்த தலைவர் என்ற முறையில் தம்மால் சூத்திரதாரி யார் என்பதை ‘உணர’ முடிகிறது”. மலேசிய- சீன உயர் அதிகாரிகளின் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஜாஹிட் இவ்வாறு கூறினார்.
அவர்களால் நஜிப்பை எதுவும் செய்ய இயலாது. அந்த 34 கிளைகளும் நாடு முழுவதுமுள்ள 21,000 கிளைகளைப் பிரதிநிதிக்கவில்லை என்றாரவர்.
சூத்திரதாரி குறை சொல்வதற்கு அம்னோ கிளைகளைப் பயன்படுத்திக் கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறைசொல்வதற்குக் கட்சியில் வழிமுறைகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.
இது என்ன பெரிய இரகசியமா? இந்த நாட்டில் வாழும் சின்னப் பிள்ளைக் கேட்டாலும் சொல்லும்.
முதலில் உன்னை பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் உளறாதே ?
முன்பொருமுறை இப்படிதான் ஜாஹிட் தனது வாலை ஆட்ட முயற்சித்தபோது, மாமா மகாதீர் ஜாஹிட்டின் வாலை ஒட்ட நறுக்கினார். இம்முறை வாலா ? தலையா ? என்பதை நீயே முடிவு செய் மவனே !