ஸெட்டி: 1எம்டிபிக்கு எதிராக நடவடிக்கையில் சிறிது முன்னேற்றம் உண்டு

bnகொடுக்கப்பட்ட  அனுமதிகளை  மீறிய  1எம்டிபிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பதில் ஓரளவு  முன்னேற்றம்  காணப்பட்டிருப்பதாகக்  கூறுகிறார்  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்தார்  அசீஸ்.

“ஏற்கனவே  கூறியதுபோல்  எங்களின்  விசாரணை  முடிந்து  நடவடிக்கை  எடுப்பதில் ஓரளவு  முன்னேற்றம் காணப்பட்டுள்ளது”, என  ஸெட்டி  இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

நடவடிக்கை  எடுக்கப்பட்டுக்  கொண்டிருப்பதால் அது  பற்றி  மேலும்  விவரிக்க  அவர்  மறுத்தார்.

“அது  முடியும்  வரையில்  அதைப்  பற்றிப்  பேச முடியாது”, என்றாரவர்.

பேங்க்  நெகாரா  முன்பு  1953 நாணய மாற்றுக்  கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ்  1எம்டிபிமீது  விசாரணை  மேற்கொண்டிருந்தது.