மொராய்ஸ் கொலை விசாரணையில் தாமதம் இல்லை

delayஅரசாங்க  வழக்குரைஞர்  அந்தோனி  கெவின்  மொராய்ஸ்  கொலைமீதான  விசாரணையில்  தாமதம்  என்ற  பேச்சுக்கே இடமில்லை  என  உள்துறை  அமைச்சு  கூறியது.

மொராய்ஸைக்  காணவில்லை  என்று  தகவல்  கிடைத்தவுடனேயே  போலீசார்  புலனாய்வைத்  தொடங்கி  விட்டார்கள்  என  சுவா  தியான்  சாங்குக்கு  அளித்த  எழுத்துப்பூர்வமான  பதிலில்  உள்துறை  அமைச்சு  கூறியது.

“போலீசார்  தங்களின்  விசாரணையில்  சிசிடிவி  கேமராக்களின்  பதிவுகள்  உள்பட எல்லாவற்றையும்  கருத்தில்  கொண்டார்கள்.

“விசாரணையில்  கவனக்குறைவால்  எதுவும்  விடுபடவில்லை”, என்று அது  கூறிற்று.