பணப் பிரச்னையால் ஸ்குவாஷ் போட்டி தள்ளிவைக்கப்பட்டது

kjஉலக  ஸ்குவாஷ்  போட்டி  ஒத்திவைக்கப்பட்டதற்குப்  பணப்  பற்றாக்குறையும்  காரணமாகும்  என்று  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  கூறினார்.

“ஏற்பாட்டாளர்கள்  நேற்று  அமைச்சுக்குத்  தெரிவித்த  மறுமொழியில்  பாதுகாப்புப்  பிரச்னை  மட்டும்  காரணமல்ல  என்பதை  ஒப்புக்கொண்டனர். அவர்கள்  பணப்  பிரச்னையை  எதிர்நோக்கி  வருகிறார்கள்.

“ஏற்பாட்டு ஆதரவு  கிடைக்காததுதான் முக்கிய  காரணம்  என்றும்  அதனாலேயே  ஒத்திவைக்க  முடிவு  செய்ததாக  நேற்று  அவர்கள்  ஒப்புக்கொண்டனர்”, எனக்  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

ஏற்பாட்டாளர்கள்  பணத்துக்கு அரசாங்கத்தின்  உதவியையும்  நாடினார்கள். ஆனால், அரசாங்கத்தால்  உதவி  செய்ய  இயலாது  என்று  கைரி  கூறினார்.

“இது  உலக  ஸ்குவாஷ்  போட்டி. அவர்கள்தான்  ஏற்பாட்டாளர்கள். பணத்தைத்  தேடுவது  அவர்களின்  பொறுப்பு”, என்றார்.

உலக  ஸ்குவாஷ்  போட்டி. டிசம்பர்  11-இலிருந்து 18வரை  கோலாலும்பூரில்  நடைபெறுவதாக  இருந்தது.