மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று காலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்ட ரிம42 மில்லியன் பற்றியும் ரிம2.6 பில்லியன் நன்கொடை பற்றியும் விசாரணை செய்தது.
மலேசியாவில் நாட்டின் தலைமை நிர்வாகியை ஊழல்தடுப்பு நிறுவனம் ஒன்று விசாரணை செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் இப்படி எதுவும் நடந்ததில்லை.
இரண்டரை மணி நேரம் பிரதமரைச் சந்தித்து விசாரணை நடத்தியதை உறுதிப்படுத்தி எம்ஏசிசியும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
“பிரதமர் எம்ஏசிசி-யுடன் நன்றாக ஒத்துழைத்தார்”, என்று அது கூறிற்று.


























நல்ல விருந்து நடந்திருக்கும்,நஜிப்பை துரத்திய கூட்டம் இனி எம் எ சிசி யை துரத்த போகிறது.நஜிப்பை துரத்திட அதே கூட்டம் இனி நுருல் இசாவை தேடி அலைய போகிறது,
யானைக்கும் அடிசறுக்கும் என்பதை மறந்து ஆடினால் இப்படிதான் நடக்கும்,
வாழ்க நாராயண நாமம் .
நஜிஸ் எங்களுக்கு வெட்டினான் நாங்களும் காட்டி கொடுக்கமாட்டோம் என்று கொடுத்ததை வாங்கி வந்தோம் _ macc அதிகாரிகள்
வெறும் கண்துடைப்பு– வேறு என்ன?
நடந்தது விசாரணையா அல்லது விருந்தளிப்பா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்!!!!
கேட்கப்பட வேண்டிய கேள்விகளை நம்பிக்கை நாயகன் அவர்களே தயாரித்துக் கொடுத்திருப்பார். தயாரிப்பு,இயக்கம்,வசனம் போன்ற எல்லா பொறுப்புக்களும் ஏற்று பல திரைப்படங்களை திரையிட்ட அவருக்கு இதெல்லாம் சார்வசாதரணமப்பா! பெரும்பாலான நம் உம்னோ அரசியல் வாதிகள் நரியை நனையாமல் குளிப்பாட்டி அனுபவம் பெற்றவர்கள். ஆகவே இதெல்லாம் அவர்களுக்கு சப் சப் சோய்மா.