அன்னிய சக்திகளின் உதவியுடன் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி: அம்னோ மகளிர் எச்சரிக்கை

wanitaஅரசாங்கத்தைக்  கவிழ்க்க  அன்னிய  சக்திகளுடன்  சேர்ந்து  சதித்  திட்டம்  உருவாகி  வருவதாகவும்  அதற்கு  எதிராக  கடும்  நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்  என அம்னோ  மகளிர்  தலைவர்   ஷரிசாட்  அப்துல்  ஜலில்  அரசாங்கத்தைக்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்.

“அது  எளிய  செயலல்ல. மக்களின்  வரவேற்பைப்  பெறும்  செயலுமல்ல. ஆனால்,  நாட்டைப்  பாதுகாக்க  அதைச்  செய்யத்தான்  வேண்டும்.

“மக்கள் தொடர்ந்து  அமைதியுடனும்  இணக்கத்துடனும்  வாழ  தியாகங்களைச்  செய்ய  வேண்டும்”. புத்ரா  உலக  வாணிக  மையத்தில்  நடைபெறும்  அம்னோ  மகளிர்  ஆண்டுக்  கூட்டத்தில்  ஆற்றிய  கொள்கை  உரையில்  ஷரிசாட்  இவ்வாறு  கூறினார்.

மத்திய  கிழக்கு  நாடுகளில்  மனித  உரிமைகள்,  ஜனநாயகம்  என்ற  பெயரால்  நடைபெற்ற  போராட்டங்கள்  பேரழிவுக்கு  இட்டுச்  சென்றுள்ளாதையும் அவர்  சுட்டிக்காட்டினார்.