அவைக்கு வராத செனட்டர்களை அவைத் தலைவர் கடிந்து கொண்டார்

abuஅம்னோ  ஆண்டுக்  கூட்டத்துடன்  தொடர்பில்லாதவர்கள்  செனட்  கூட்டத்து  வராமல்  இருப்பதை  மேலவைத்  தலைவர்  அபு  ஜாஹார்  உஜாங் கடிந்து  கொண்டார்.

“அம்னோ  கூட்டத்துடன்  தொடர்புள்ள  அமைச்சர்கள்  பலர்  கூட்டத்துக்கு  வராமலிருக்க  நான்  அனுமதி  கொடுத்திருக்கிறேன். ஆனால். அதனுடன்  சம்பந்தமில்லாதவர்கள்  கண்டிப்பாக  வர  வேண்டும். ஏனென்றால் இது  ஒரு  முக்கியமான  கூட்டம்”, என்றவர்  தெரிவித்தார்.

சில  செனட்டர்கள்  அம்னோ  கூட்டத்தைக்  காரணம்  காட்டி  வராமல்  இருக்கிறார்கள்  என்றும்  அது  சரியல்ல  என்றும்  அபு  ஜஹார்  கூறினார்.

2016 விநியோக  சட்டவரைவுமீதான  விவாதத்தில் கலந்துகொள்ள  மேலவை  உறுப்பினர்கள்  அனைவரும்  அவைக்கு  வருவது  அவசியம்  என்றாரவர்.

திங்கள்கிழமை  தொடங்கிய  மேலவைக்  கூட்டம்  டிசம்பர்  22வரை  நடக்கும்.