மகாதிர்: நஜிப் எனக்கு கையூட்டு கொடுக்க முயன்றார்

 பிரதமர் நஜிப் ரசாக் தமக்கு கையூட்டு கொடுக்க முயன்றார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் குற்றம் சாட்டினார்.

பல சந்தர்ப்பங்களில் நஜிப் தம்மைச் சந்தித்து தமக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளதாக மகாதிர் கூறினார்.

“இது கபடமற்றது என்று நினைத்து நாட்டிற்காக சில மேம்பாட்டு திட்டங்களை கூறினேன்.

“பின்னர்தான் தெரிந்தது அவர் எனக்கு இலஞ்சம் கொடுக்க முயல்கின்றார், அப்போதுதான் நான் 1எம்டிபி விவகாரத்தை எழுப்பமாட்டேன்”, என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் இன்றிரவு பதிவு செய்துள்ளார்.